LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அறிமுகமானது இந்தியாவின் முதல் பேமன்ட் கார்டு

ஏடிஎம் மையங்களின் இனி பணம் எடுக்கவும், ஷாப்பிங் செய்வதற்கும் இனி வெளி நாட்டு நிறுவனங்களின் ‘பெமென்ட்’ கார்டுகளை (Payment Card) எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இண்டியா என்ற இந்திய நிறுவனம், ரூ பே(Ru Pay) என்ற பேமென்ட் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது. 


இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, "ரூ பே" கார்டு சேவையை தொடங்கிவைத்தார். 


இந்த ‘ரூ பே’ கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யலாம்.


வங்கி ஏடிஎம்களிலும் ரொக்கம் எடுக்க இந்த கார்டை பயன்படுத்தலாம்.


தற்போது நாடு முழுவதும் 10 ஆயிரம் வியாபார நிறுவனங்கள் இந்த கார்டை ஏற்கின்றன. 


விரைவில், ரூ பே கார்டு போன்று, விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் கிசான் கார்டு வெளியிடப்படுகிறது. அதுபோல, விரைவில் ரயில் முன்பதிவுக்கு பயன்படும் வகையில் ரயில்வேயின் ஐஆர்டிசி நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.


வங்கிகள் தரும் ஏடிஎம் கார்டுகளை தவிர, சில வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் தான் பேமென்ட் கார்டுகள் வெளியாகி உள்ளன. இப்போது தான் முதன் முதலில் இந்தியாவின் சொந்தமான ஒரு பேமென்ட் கார்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 09 May 2014  0 Comments
Tags: First Payment Gateway   India\'s First Payment Gateway   RuPay   RuPay Launched   ரூபே   பேமன்ட் கார்டு     
 தொடர்புடையவை-Related Articles
அறிமுகமானது இந்தியாவின் முதல் பேமன்ட் கார்டு அறிமுகமானது இந்தியாவின் முதல் பேமன்ட் கார்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.