LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சமூக விழிப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களை எடுங்கள் !! திரை துறைக்கு ஜனாதிபதி அறிவுரை !!!

பொழுதுபோக்கு திரைபடங்களாக மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வுடன் கூடிய படங்களையும் எடுக்க வேண்டும் என, திரைபடத்துறையினருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,அறிவுரை வழங்கினார்.


கடந்த 21ம் தேதி, சென்னையில் தொடங்கிய இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நேற்று மாலை நேரு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, கேரளா முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோர், தலைமை தாங்கினர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 45 பேருக்கு விருது வழங்கினார்.


விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: முன்பு சமூக பொறுப்புணர்வுடன், திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது இந்நிலை மாறி உள்ளது. பொழுதுபோக்கிற்காக படங்கள் எடுக்கப்படுகின்றன. நம் நாட்டில், சமீப காலமாக, சமூக ஒற்றுமையை குலைக்கும் விதத்தில், ஆங்காங்கே மோதல் ஏற்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இச்சூழலில், திரைப்படத் துறையினர், வெறும் பொழுதுபோக்கு படங்களாக மட்டும் எடுக்காமல், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய படங்களை எடுக்க வேண்டும். மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், 
சகிப்புத்தன்மை, ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில், திரைப்படங்களை தயாரிக்க வேண்டும். என பிரணாப் முகர்ஜி கூறினார்.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: பிரணாப் முகர்ஜி   இந்திய சினிமா நூற்றாண்டு விழா   Pranab Mukherjee   South Indian Film Chamber           
 தொடர்புடையவை-Related Articles
சமூக விழிப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களை எடுங்கள் !! திரை துறைக்கு ஜனாதிபதி அறிவுரை !!! சமூக விழிப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களை எடுங்கள் !! திரை துறைக்கு ஜனாதிபதி அறிவுரை !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.