|
||||||||
முன் பின் பிறவிகள் |
||||||||
ஒரு மனிதனுடைய முற்பிறவிகளை அறியவேண்டுமானால் அவன் உருவத்திற்கு மூலமான விந்துநாதத் தொடர்பை யூகத்தால் பற்றிக் கொண்டே பின் நோக்கிச் செல்ல வேண்டும். அத்தொடர்பு பல்லாயிரக்கணக்கான உருவ வேறுபாடுகளையுடைய ஜீவராசிகளாகக் காட்சியளிக்கும். அத்தனை ஜீவராசிகளின் உடலியக்கம், அறிவியக்கம் இவைகளை அடக்கமாகப் பெற்றவனே ஒவ்வொரு மனிதனும். பின்னோக்கிச் செல்லும் உருவ பரிணாமத் தொடர்பு பல ஜீவராசிகளையும் தாண்டிப் போய், இறுதியாகப் பரமாணுவிலேயே முடிவு பெறும். அங்கிருந்து முன்நோக்கிப் பார்த்தால் எல்லா ஜீவராசிகளும், தோற்றப்பொருட்களும் ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டு விரிந்து, பிரிந்து, தொடர்ந்து இயங்கும் ஒரு அகண்ட பேரியக்கம் அறிவுக்கு காட்சியாகும்.
ஒரு மனிதன் பின் பிறவிகளை அறிய வேண்டுமானால் அவைகள் அவன் விந்துவின் மூலம் தோன்றும் மக்களும், அம்மக்களின் மூலம் தொடர்ந்து தோன்றும் மக்களுமேயாகும். ஆதி அல்லது அகண்ட சக்தி, அணு, அறிவு என்ற மூன்று நிலைகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த விளக்கம் மிகத்தெளிவாக இருக்கும். மற்றவர்கள் பொறுமையோடு பல தடவை சிந்தித்தே அறிய வேண்டும்.
-வேதாத்திரி மகரிஷி
ஒரு மனிதனுடைய முற்பிறவிகளை அறியவேண்டுமானால் அவன் உருவத்திற்கு மூலமான விந்துநாதத் தொடர்பை யூகத்தால் பற்றிக் கொண்டே பின் நோக்கிச் செல்ல வேண்டும். அத்தொடர்பு பல்லாயிரக்கணக்கான உருவ வேறுபாடுகளையுடைய ஜீவராசிகளாகக் காட்சியளிக்கும். அத்தனை ஜீவராசிகளின் உடலியக்கம், அறிவியக்கம் இவைகளை அடக்கமாகப் பெற்றவனே ஒவ்வொரு மனிதனும். பின்னோக்கிச் செல்லும் உருவ பரிணாமத் தொடர்பு பல ஜீவராசிகளையும் தாண்டிப் போய், இறுதியாகப் பரமாணுவிலேயே முடிவு பெறும். அங்கிருந்து முன்நோக்கிப் பார்த்தால் எல்லா ஜீவராசிகளும், தோற்றப்பொருட்களும் ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டு விரிந்து, பிரிந்து, தொடர்ந்து இயங்கும் ஒரு அகண்ட பேரியக்கம் அறிவுக்கு காட்சியாகும்.
-வேதாத்திரி மகரிஷி |
||||||||
by Swathi on 14 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|