LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

குழாய் மூலம், 'காஸ்' திட்டம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

நாடு முழுவதும், 122 மாவட்டங் களில், குழாய் மூலம், சமையல் எரிவாயு (காஸ்) வழங்கும் திட்டத்துக்கு, பிரதமர் மோடி,  அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில், சேலம், கோவை நகரங்கள், இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளன.சமையல் எரிவாயுவை, நேரடியாக குழாய் மூலம், சமையல் அறைக்கே எடுத்துச் செல்லும் திட்டம், சில நகரங்களில் மட்டுமே, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும், 18 மாநிலங்களில், 122 மாவட்டங்களில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.'குழாய் மூலம், நகரங்களுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்' என, இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

டெல்லியிலிருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினார். 

அப்போது அவர் பேசியதாவது: 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதால், எரிசக்திக்கான தேவையும் அதிகரிக்கிறது

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், எரிசக்தியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, எரிசக்தி தயாரிப்பில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. வாகனங்களுக்கு மட்டுமின்றி, சமையல் எரிவாயுவையும், குழாய் மூலம் நேரடியாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாங்கள் ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்வரை, சமையல் எரிவாயு இணைப்பு, 55 சதவீதமாகத் தான் இருந்தது. 60ஆண்டுகளில், 15 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தன. நாங்கள் ஆட்சியில் அமர்ந்த பின், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 12 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல், குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை, 24 லட்சமாக இருந்தது.

தற்போது இந்த எண்ணிக்கை, 2 கோடியாக உயர்ந்து உள்ளது. தற்போது, நாடு முழுவதும், 66 மாவட்டங்களில், குழாய் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. 174  மாவட்டங்களில், இந்த திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில், 400 மாவட்டங்களில், குழாய் எரிவாயு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலின் போது, 'அரசை மாற்றினால் மட்டும் போதாது; வேலை செய்யும் முறை, கலாசாரம், திட்டங்களை செயல்படுத்தும் முறை ஆகியவற்றை மாற்ற வேண்டும்' என்றேன்; அதை மக்கள் ஏற்றதால் தான், இந்த சாதனையை படைக்க முடிந்தது. 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நகர எரிவாயு திட்டம், தமிழகத்தில், காஞ்சிபுரம், திருப்பூர் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக, சேலம், கோவை நகரங்கள், இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.