|
|||||
பிரதமர் அலுவலக கார்கள் ஏலம்!இம்ரான் கான் அதிரடி!! |
|||||
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் அலுவலகத்தில் இருந்த 70 ஆடம்பர கார்களை ஏலத்தில் விட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இம்ரான் கான், நாட்டு மக்களிடையே பேசும் போது, ''பாகிஸ்தானில் பிரதமருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய பங்களாவில் தங்க மாட்டேன். அரசு செலவுகளைக் குறைப்பேன். எளிமையாக இருப்பேன்'' என்று தெரிவித்திருந்தார். அதன்படி, பிரதமர் இல்லத்தில் இருந்த 120 ஆடம்பர வாகனங்களை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 70 ஆடம்பர கார்கள் ஏலத்தில் விடப்பட்டன. வழக்கமான விலையைக் காட்டிலும் அவை அதிகமான விலைக்கு விற்றுத் தீர்ந்தன. இதுகுறித்துப் பேசிய தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ''பிரதமர் அறிவித்தபடி 70 கார்களை நல்ல விலைக்கு வெற்றிகரமாக விற்றுவிட்டோம். இந்த ஏலம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.116 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்தபடியாக புல்லட் ப்ரூஃப் வாகனங்கள் ஏலத்துக்கு விடப்படும்'' என்றார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உணவுத்தேவைக்காக வைத்திருந்த, பிரதமர் இல்லத்தில் இருக்கும் 8 எருமைகளை ஏலத்தில் விட பிரதமர் இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார். |
|||||
by Mani Bharathi on 19 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|