LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ஏழை மாணவர்களுக்கு 25 % ஒதுக்கீடு வழங்க தமிழக தனியார் பள்ளிகள் சம்மதம்!

தமிழக அரசு அளித்த உத்திரவாதத்தை அடுத்து ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க தனியார் பள்ளிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.


கட்டாயக் கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகள், எழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 


தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழை மாணவர்களுக்கான செலவுத் தொகையை அரசே செலுத்தும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களின் செலவுத் தொகையை அரசு தரவில்லை எனக் கூறி, இனிமேல் ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் சங்கம் நேற்று அறிவித்தது.


இதைத் தொடர்ந்து, சென்னையில், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தினார்.


இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், ''எழை மாணவர்களுக்கான கல்வி செலவுத் தொகை 3 மாதத்தில் செலுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


தமிழக அரசின் வேண்டுகோள் குறித்து தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்'' என்றனர்.


இதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று  ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவதென்று முடிவு செய்யப்பட்டதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

by Swathi   on 06 May 2014  0 Comments
Tags: Private Schools   Tamilnadu Private Schools   Private Schools Approve   Poor Students   Poor Students Admission Quota   ஏழை மாணவர்கள்   தனியார் பள்ளிகள்  
 தொடர்புடையவை-Related Articles
ஏழை மாணவர்களுக்கு 25 % ஒதுக்கீடு வழங்க தமிழக தனியார் பள்ளிகள் சம்மதம்! ஏழை மாணவர்களுக்கு 25 % ஒதுக்கீடு வழங்க தமிழக தனியார் பள்ளிகள் சம்மதம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.