ஜெய் நடித்த வாமணன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தொடர்ந்து, புகைப்படம், நூற்றிஎன்பது, எதிர்நீச்சல், வணக்கம்சென்னை, அரிமா நம்பி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிவரும் ‘வை ராஜா வை’ படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்திற்குப் பிறகு சந்தானத்துடன் இணைந்து நடிக்கவுள்ளாராம் பிரியா ஆனந்த்.
‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷிடம் உதவியாளராக பணியாற்றியவர் அருண் பிரசாத். இவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் சந்தானம், ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தில் நடித்த சேது, சக்தி, பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படபிடிப்பை இந்த மாத கடைசியில் தொடங்க உள்ளார்களாம் படக்குழுவினர்.
|