LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- பாக்கியம் ராமசாமி

பிரியமான கடிதம்

 

பிரியமுள்ள கணவருக்கு,
வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து மாதிரி ஆகிவிடும். வலை பீரோவை நன்றாகக் கவனிக்கவும். ஏதேனும் எறும்புகள் தென்படுகின்றனவா? வலை பீரோவின் கால்களுக்கு மறக்காமல் தண்ணீர் ஊற்றவும். கொஞ்சம் நெய் வைத்துவிட்டு வந்திருந்தேன். அதை என்ன செய்தீர்கள்? ஊறுகாய் கெடாமலிருக்கிறதா? சலவைக்காரன் வந்தானா? பழைய பாக்கி துணிகளில் இரண்டு கொண்டு வரவேண்டும். மூன்றரையணா அவனே நமக்குத் தரவேண்டும். இந்தத் தடவை மொத்தமாக எத்தனை துணி போட்டீர்கள்? மூன்றாவது வீட்டிலே அந்தப் பையன் ஞானசம்பந்தம் அடிக்கடி வருகிறானா? அவன் வந்தால் நீங்கள் கூடவே இருங்கள். அவன் போன பிறகு எல்லாம் சரியாயிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். (அவனை வீட்டுக்குள் விடாமலிருப்பது ரொம்பவும் நல்லது.) எதிர்வீட்டில் ‘காரம் போர்டு’ வாங்கிக் கொண்டு போனார்கள். திருப்பிக் கொடுத்து விட்டார்களா? திருப்பிக் கொடுத்திருந்தால் காயினெல்லாம் சரியாயிருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவும். ராத்திரியில் ரேடியோ கேட்கவேண்டாம். அணைக்க மறந்து போய் அப்படியே தூங்கிவிடுவீர்கள்.
சாயிபாபா படத்துக்குப் பிரேம் போட்டு விட்டீர்களா? பிரேம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்பது என் அபிப்பிராயம். பிரேம் போடுகிற பணத்துக்கு புதிதாகவே வாங்கி விடலாம். காற்றில் ஜன்னல் அடித்துக் கொள்கிறதா? அதற்கு வைப்பதற்காக அளவாக ஒரு சின்னச் செங்கல் வைத்திருந்தேனே? அது இருக்கிறதா? படார் படாரென்று இரண்டு தடவை அடித்துக் கொண்டால் கதவு போய்விடும். ஜன்னல் திரையை நீங்களே சோப்புப் போட்டுத் துவைத்து விடுங்கள். சலவைக்குப் போனால் வருவதற்கு நாளாகும். புத்தக அலமாரிக்குச் சற்றுத் தள்ளி ஓட்டுப் பக்கமிருந்து வாலோடியாக ஒரு கரையான் சரம் இறங்கியிருந்ததே அதைத் தட்டிச் சுத்தம் செய்தீர்களா? சிறிது மண்ணெண்ணெய் புட்டியில் இருந்ததெல்லாம் தீர்ந்து விட்டதா? காப்பி போட்டுக் கொள்வதற்காகத் தினமும் எவ்வளவு மண்ணெண்ணெய் உபயோகப்படுத்துகிறீர்கள்? ஞபாகமாக ஆபீஸ் போகும்போது அடுப்பை அணைத்துவிட்டுப் போகவும். ஈரத்துணியை மழை வரும் போலிருந்தால் வீட்டுக்குள்ளேயே உலர்த்திவிட்டுச் செல்லவும். காய்ந்த துணிகளை மாலையில் ஆபீஸ் விட்டு வந்ததும் எடுத்து வைத்துவிடவும். மீட்டர் கட்டணம் எவ்வளவு ஆயிற்று? போன மாதத்தில் பணத்தை வரவு வைக்காமல் விட்டுவிட்டது பற்றி ‘கம்ப்ளைண்ட்’ செய்தீர்களா? வீட்டை வேலைக்காரக் கிழவி வந்து பெருக்குகிறாளா? வெள்ளிக் கிழமைகளில் தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவிவிடாமல் ஏமாற்றிவிடப் போகிறான். அவளுடைய பெண்ணுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாள். அடிக்கடி லீவ் போட்டுவிடப் போகிறாள். அட்வான்ஸாக அவளுக்கு நான் மூன்று ரூபாய் கொடுத்திருந்தேன். உங்களிடம் ஏதாவது மறுபடியும் வாங்கியிருக்கிறாளா? காப்பிக் கொட்டை மிஷினில் கொஞ்சம் காப்பிக் கொட்டை இருக்கும். அது வீணாக வேண்டாம். எப்படியும் உபயோகித்து விடுங்கள். நகரில் திருட்டுப் போகிறதென்றும் வெளியில் போகும்போது போலீசுக்குச் சொல்லிவிட்டுப் போகும்படியும் பத்திரிகையில் பார்த்தேன். ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவும். தூங்குவதற்கு முன் புழக்கடைக் கதவு, வாசல் முதலானவைகளை ஒருமுறை சோம்பலில்லாமல் சென்று பார்வை இடவும்.
செடிக்குத் தண்ணீர் விடுகிறீர்களா? மல்லிகைப் பூ அரும்பு விட்டியிருந்ததே, ஏதாவது பூத்ததா? சாமந்திச் செடிக்கு அடியில் கொத்திப் பார்த்தீர்களா? கட்டாயம் கீழே பாறை இருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அது அப்படி வளராமல் இருக்காது. பெருச்சாளி ஒன்று வந்து தொந்தரவு கொடுத்து வந்ததே, அது என்ன ஆயிற்று? வேறு விசேஷமில்லை.
எனக்கு எப்போதும் உங்கள் நினைவாகவே இருக்கிறது.
- தங்கள் அன்புள்ள
மனைவி

         பிரியமுள்ள கணவருக்கு,வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து மாதிரி ஆகிவிடும். வலை பீரோவை நன்றாகக் கவனிக்கவும். ஏதேனும் எறும்புகள் தென்படுகின்றனவா? வலை பீரோவின் கால்களுக்கு மறக்காமல் தண்ணீர் ஊற்றவும். கொஞ்சம் நெய் வைத்துவிட்டு வந்திருந்தேன். அதை என்ன செய்தீர்கள்? ஊறுகாய் கெடாமலிருக்கிறதா? சலவைக்காரன் வந்தானா? பழைய பாக்கி துணிகளில் இரண்டு கொண்டு வரவேண்டும். மூன்றரையணா அவனே நமக்குத் தரவேண்டும். இந்தத் தடவை மொத்தமாக எத்தனை துணி போட்டீர்கள்? மூன்றாவது வீட்டிலே அந்தப் பையன் ஞானசம்பந்தம் அடிக்கடி வருகிறானா? அவன் வந்தால் நீங்கள் கூடவே இருங்கள். அவன் போன பிறகு எல்லாம் சரியாயிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். (அவனை வீட்டுக்குள் விடாமலிருப்பது ரொம்பவும் நல்லது.)

 

         எதிர்வீட்டில் ‘காரம் போர்டு’ வாங்கிக் கொண்டு போனார்கள். திருப்பிக் கொடுத்து விட்டார்களா? திருப்பிக் கொடுத்திருந்தால் காயினெல்லாம் சரியாயிருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவும். ராத்திரியில் ரேடியோ கேட்கவேண்டாம். அணைக்க மறந்து போய் அப்படியே தூங்கிவிடுவீர்கள்.சாயிபாபா படத்துக்குப் பிரேம் போட்டு விட்டீர்களா? பிரேம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்பது என் அபிப்பிராயம். பிரேம் போடுகிற பணத்துக்கு புதிதாகவே வாங்கி விடலாம். காற்றில் ஜன்னல் அடித்துக் கொள்கிறதா? அதற்கு வைப்பதற்காக அளவாக ஒரு சின்னச் செங்கல் வைத்திருந்தேனே? அது இருக்கிறதா? படார் படாரென்று இரண்டு தடவை அடித்துக் கொண்டால் கதவு போய்விடும். ஜன்னல் திரையை நீங்களே சோப்புப் போட்டுத் துவைத்து விடுங்கள். சலவைக்குப் போனால் வருவதற்கு நாளாகும். புத்தக அலமாரிக்குச் சற்றுத் தள்ளி ஓட்டுப் பக்கமிருந்து வாலோடியாக ஒரு கரையான் சரம் இறங்கியிருந்ததே அதைத் தட்டிச் சுத்தம் செய்தீர்களா? சிறிது மண்ணெண்ணெய் புட்டியில் இருந்ததெல்லாம் தீர்ந்து விட்டதா? காப்பி போட்டுக் கொள்வதற்காகத் தினமும் எவ்வளவு மண்ணெண்ணெய் உபயோகப்படுத்துகிறீர்கள்? ஞபாகமாக ஆபீஸ் போகும்போது அடுப்பை அணைத்துவிட்டுப் போகவும். ஈரத்துணியை மழை வரும் போலிருந்தால் வீட்டுக்குள்ளேயே உலர்த்திவிட்டுச் செல்லவும். காய்ந்த துணிகளை மாலையில் ஆபீஸ் விட்டு வந்ததும் எடுத்து வைத்துவிடவும்.

 

       மீட்டர் கட்டணம் எவ்வளவு ஆயிற்று? போன மாதத்தில் பணத்தை வரவு வைக்காமல் விட்டுவிட்டது பற்றி ‘கம்ப்ளைண்ட்’ செய்தீர்களா? வீட்டை வேலைக்காரக் கிழவி வந்து பெருக்குகிறாளா? வெள்ளிக் கிழமைகளில் தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவிவிடாமல் ஏமாற்றிவிடப் போகிறான். அவளுடைய பெண்ணுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாள். அடிக்கடி லீவ் போட்டுவிடப் போகிறாள். அட்வான்ஸாக அவளுக்கு நான் மூன்று ரூபாய் கொடுத்திருந்தேன். உங்களிடம் ஏதாவது மறுபடியும் வாங்கியிருக்கிறாளா? காப்பிக் கொட்டை மிஷினில் கொஞ்சம் காப்பிக் கொட்டை இருக்கும். அது வீணாக வேண்டாம். எப்படியும் உபயோகித்து விடுங்கள். நகரில் திருட்டுப் போகிறதென்றும் வெளியில் போகும்போது போலீசுக்குச் சொல்லிவிட்டுப் போகும்படியும் பத்திரிகையில் பார்த்தேன்.

 

       ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவும். தூங்குவதற்கு முன் புழக்கடைக் கதவு, வாசல் முதலானவைகளை ஒருமுறை சோம்பலில்லாமல் சென்று பார்வை இடவும்.செடிக்குத் தண்ணீர் விடுகிறீர்களா? மல்லிகைப் பூ அரும்பு விட்டியிருந்ததே, ஏதாவது பூத்ததா? சாமந்திச் செடிக்கு அடியில் கொத்திப் பார்த்தீர்களா? கட்டாயம் கீழே பாறை இருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அது அப்படி வளராமல் இருக்காது. பெருச்சாளி ஒன்று வந்து தொந்தரவு கொடுத்து வந்ததே, அது என்ன ஆயிற்று? வேறு விசேஷமில்லை.எனக்கு எப்போதும் உங்கள் நினைவாகவே இருக்கிறது.- தங்கள் அன்புள்ளமனைவி

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.