|
|||||
ஹெலிகாப்டர் ஊழலின் முக்கிய ஆதாரங்களை வழங்கியது இத்தாலி ! |
|||||
இந்திய வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்
வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்திய
அதிகாரிகளுக்கு, இத்தாலி நிறுவனம் லஞ்சம் கொடுத்தது, இத்தாலி அதிகாரிகள் நடத்திய
விசாரணையில் தெரியவந்தது.இந்த விவகாரம், இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரிக்க இந்திய சி.பி.ஐ அதிகாரிகள் குழு, இத்தாலிக்கு சென்றது. ஒரு வாரம், அங்கு
தங்கியிருந்த சி.பி.ஐ அதிகாரிகள், இத்தாலியைச் சேர்ந்த, புலனாய்வு அமைப்புகளிடமும்,
ஹெலிகாப்டர் நிறுவனத்திடமும் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு சென்ற, சி.பி.ஐ., குழுவில்,
ஒருவரை தவிர, மற்ற அனைவரும், இந்தியாவுக்கு திரும்பி விட்டனர். ஒரு அதிகாரி மட்டும், மிலன்
நகரில் தங்கி மற்ற விசாரணைகளை தொடருவார் என தெரிகிறது.இந்நிலையில், இந்த பிரச்னையில்,
புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள்
கூறியதாவது, வழக்கின் விசாரணைக்கு தேவையான, சில முக்கிய ஆவணங்களை, இத்தாலி
அதிகாரிகள், சி.பி.ஐ.,யிடம் அளித்துள்ளதாகவும் விரைவில் இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டும்
என சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் |
|||||
Probe team to Italy returns empty-handed | |||||
The Indian investigation team that went to Italy to probe the VVIP helicopter kickback scandal has returned without any major breakthrough, even as Finmeccanica has agreed to provide all its internal documents for scrutiny by India. |
|||||
by Swathi on 25 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|