இந்தியாவின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்ட நிலையில் தான் மொழிப் போராட்டம் வெடித்தது. அப்போது இந்திய அரசு ஏற்கனவே இந்தியை எப்படியெல்லாம் மக்களிடம் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டியது. அத்திட்டங்களில் ஒன்று இந்தி எண்களை கட்டாயப்படுத்துவது. அதாவது வங்கிகளில் , தனியார் நிறுவன வருமான கணக்குகள் அனைத்திலும் இந்தி எண்களை தான் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது இந்தி அரசு. இவ்வாறு செய்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் இப்போது பயன்படுத்தும் சர்வதேச எண்களை பயன்படுத்த முடியாது. இந்திய மக்கள் அனைவரும் இந்தி எண்களை மட்டுமே எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தி ஆட்சி மொழி சட்டம் உருவாகியது. தமிழ் மாணவர்களும் இந்தியில் தான் கணக்குகளை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆனால் முடிவில் தமிழர்கள் செய்த போராட்டத்தால் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டம் பின்வாங்கப்பட்டது. ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடித்தது. இதன் காரணமாக இப்போது சர்வதேச எண்களை இந்தியாவெங்கும் உள்ள மக்களால் எளிதில் பயன்படுத்த முடிகிறது. உலகமெங்கும் இந்திய மக்கள் சென்று கணிதத்தில், வணிகத்தில் வெற்றி ஈட்டவும் முடிகிறது. இப்பொது சொல்லுங்கள் மொழிப்போர் ஈகியர்களின் தியாகம் வீணானதா?
|