|
|||||
அரசு மருத்துவமனைகளில் பிறப்புச்சான்றிதழ் வழங்க தனி அலுவலர்கள்! |
|||||
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் வழங்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் 22 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், ஒரு பல்நோக்கு மருத்துவமனை, பல் மருத்துவக்கல்லூரி, 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் 11 ஆயிரத்து 203 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இம்மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், பெயர் மாற்றம், பிழை திருத்தம் செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாகவும் நீண்ட நாட்களாக புகார் எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கென மென்பொருள் உருவாக்கப்பட்டது. முதற்கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு சான்றிதழை பதிவு செய்து வழங்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். .அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறப்பு சான்றிதழ் வழங்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா தலைமை மருத்துவமனைகளில் பிறப்பு சான்றிதழ்கள் வழங்க தனி அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நியமன பணிகள் தற்போது நடந்து வருகிறது. இனி பிறந்த குழந்தைகளின் பெயர் மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்டவைகளை குழந்தை பிறந்து வீடு செல்லும் முன்பாக மருத்துவமனையிலேயே திருத்திக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பிறப்பு சான்றிதழ் வழங்கும் முறையே தொடரும்’ இவ்வாறு அவர்கள் கூறினர். |
|||||
by Mani Bharathi on 03 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|