LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அரசு மருத்துவமனைகளில் பிறப்புச்சான்றிதழ் வழங்க தனி அலுவலர்கள்!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் வழங்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், ஒரு பல்நோக்கு  மருத்துவமனை, பல் மருத்துவக்கல்லூரி, 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் 11 ஆயிரத்து 203 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. 

இம்மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், பெயர் மாற்றம், பிழை திருத்தம் செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாகவும் நீண்ட நாட்களாக புகார் எழுப்பப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கென  மென்பொருள் உருவாக்கப்பட்டது. முதற்கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு சான்றிதழை பதிவு செய்து வழங்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். .அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறப்பு சான்றிதழ் வழங்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

 இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

 ‘மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா தலைமை மருத்துவமனைகளில் பிறப்பு சான்றிதழ்கள் வழங்க தனி அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நியமன பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இனி பிறந்த குழந்தைகளின் பெயர் மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்டவைகளை குழந்தை பிறந்து வீடு செல்லும் முன்பாக மருத்துவமனையிலேயே திருத்திக்கொள்ளலாம். 

தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பிறப்பு சான்றிதழ் வழங்கும் முறையே தொடரும்’

இவ்வாறு அவர்கள் கூறினர்.

by Mani Bharathi   on 03 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.