LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

புலித்தோல் வேண்டும் - கவிஞர் மகுடேசுவரன்

 

மாமிசக் கொட்டாவி விட்டபடி 
களைத்துப் படுத்திருந்தது புலி.
பதுங்கிப் பம்மி 
அதனருகில் சென்றேன்.
ஏறிட்டு உறுமிய புலி 
எங்கே வந்தாய் என்றது.
என் பசிக்கு உன்னுடல் கரும்புதான் 
மிகையூண் கொள்வதில்லை நான்...
தப்பித்தாய்...’ என்றது.
எதிரி நம்மிடம் பேசினாலே 
பாதி வெற்றி.
எனக்கு 
ஓர் உதவி வேண்டும்’ என்றேன்.
என்ன உதவி’ என்றது.
புலிநகம் கோத்த 
பொற்சரம் அணிய விருப்பம்... 
உன் விரலொன்றை நீட்டு 
வெடுக்கென்று பிடுங்கிக்கொள்கிறேன்’ என்றேன்.
வேட்டை மனம் மறந்து 
கர்ண மனத்திலிருந்த 
காட்டுப் புலி 
வேண்டியதைப் பிடுங்கிக்கொள்’ என்று 
விட்டுக்கொடுத்தது.
இருபது நகங்களையும் 
வகிர்ந்துகொண்டேன்.
புவியில் நீயே 
போற்றத் தகுந்த புலி’ என்று 
புகழ்ந்தடுக்கினேன்.
என் புகழ்ச்சியில் 
புலிக்குத் தூக்கம் வந்துவிட்டது.
கிறங்கிய விழிகளோடு 
‘இன்னும் என்ன வேண்டும்...’ என்றது.
புலிப்பல் வேண்டுமென்றேன். 
ஆடும் ஒரு பல்லைப் பிடுங்கிக்கொள்’ என்று 
வாயைத் திறந்தபடி தூங்கியது.
குறடுகொண்டு 
எல்லாப் பற்களையும் பிடுங்கிக்கொண்டேன்.
போகாமல் 
அருகேயே நின்றேன்.
இன்னும் என்ன...?’ என்றது.
அதை உச்சரிக்கும்போதுதான் 
தன்வாய் அதிகம் ஒடுங்குவதை 
உணர்ந்திருக்க வேண்டும்.
அச்சம் நீங்கியிருந்தது எனக்கு.
அது கீறினால் 
மெத்தென்றிருக்கும்
கடித்தால் 
பிடித்துவிடுவதுபோல் இருக்கும்.
‘புலித்தோல் வேண்டும்’ என்றேன்.
- கவிஞர் மகுடேசுவரன்

மாமிசக் கொட்டாவி விட்டபடி 

களைத்துப் படுத்திருந்தது புலி.


பதுங்கிப் பம்மி 

அதனருகில் சென்றேன்.


ஏறிட்டு உறுமிய புலி 

எங்கே வந்தாய் என்றது.


என் பசிக்கு உன்னுடல் கரும்புதான் 

மிகையூண் கொள்வதில்லை நான்...

தப்பித்தாய்...’ என்றது.


எதிரி நம்மிடம் பேசினாலே 

பாதி வெற்றி.


எனக்கு 

ஓர் உதவி வேண்டும்’ என்றேன்.


என்ன உதவி’ என்றது.


புலிநகம் கோத்த 

பொற்சரம் அணிய விருப்பம்... 


உன் விரலொன்றை நீட்டு 

வெடுக்கென்று பிடுங்கிக்கொள்கிறேன்’ என்றேன்.


வேட்டை மனம் மறந்து 

கர்ண மனத்திலிருந்த 

காட்டுப் புலி 

வேண்டியதைப் பிடுங்கிக்கொள்’ என்று 

விட்டுக்கொடுத்தது.


இருபது நகங்களையும் 

வகிர்ந்துகொண்டேன்.


புவியில் நீயே 

போற்றத் தகுந்த புலி’ என்று 

புகழ்ந்தடுக்கினேன்.


என் புகழ்ச்சியில் 

புலிக்குத் தூக்கம் வந்துவிட்டது.


கிறங்கிய விழிகளோடு 

‘இன்னும் என்ன வேண்டும்...’ என்றது.


புலிப்பல் வேண்டுமென்றேன். 


ஆடும் ஒரு பல்லைப் பிடுங்கிக்கொள்’ என்று 

வாயைத் திறந்தபடி தூங்கியது.


குறடுகொண்டு 

எல்லாப் பற்களையும் பிடுங்கிக்கொண்டேன்.


போகாமல் 

அருகேயே நின்றேன்.


இன்னும் என்ன...?’ என்றது.


அதை உச்சரிக்கும்போதுதான் 

தன்வாய் அதிகம் ஒடுங்குவதை 

உணர்ந்திருக்க வேண்டும்.


அச்சம் நீங்கியிருந்தது எனக்கு.


அது கீறினால் 

மெத்தென்றிருக்கும்

கடித்தால் 

பிடித்துவிடுவதுபோல் இருக்கும்.

‘புலித்தோல் வேண்டும்’ என்றேன்.


- கவிஞர் மகுடேசுவரன்

 

by Swathi   on 26 Nov 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
15-Sep-2019 13:58:59 சேதுராமன் said : Report Abuse
உங்கள் கவிதை நிறைய படித்திருக்கிறேன். என்னை துளைத்து விட்டது சில, என்னை தொலைத்தேன் பல கவிதைகளில்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.