திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக. (சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.)
நல் அவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்ல அறிஞரவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்ல வல்லார்; புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அறிஞரில்லாச் சிறியோ ரவைக்கண் அவற்றை மறந்துஞ் சொல்லாதிருக்க. சொல்லின், பன்றிக்குமுன் முத்தைப் போடுதலென்று நல்லவையும், பொருள் விளங்காமையிற் புல்லவையும் பழித்தலால் , இருசாரார்க்கும் ஆகாமை கருதிப் 'பொச்சாந்துஞ் சொல்லற்க' என்றார்.
கலைஞர் உரை:
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.
சாலமன் பாப்பையா உரை:
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.
Translation
In councils of the good, who speak good things with penetrating power,
In councils of the mean, let them say nought, e'en in oblivious hour.
Explanation
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.