|
|||||
பூசணிக்காயின் மருத்துவ பண்புகள்(The medicinal properties of pumpkin) |
|||||
1.பூசணிக்காய்க்கு வெண்பூசணி,கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. 2.வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். 3.பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர் இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும். 4.பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறையும். 5.பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு டீஸ்பூன் தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் சரியாகும்.சிறுநீரில் ஏற்படும் ரத்தம்,சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும். 6.பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்க வேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2 முதல் 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும். 7.பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டியாகும். |
|||||
by sandhiya on 07 Jun 2012 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|