LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம்

 

சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து 
கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன் 
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப் 
புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 438 
ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்ததைப் புலனாய 
சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி 
ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப் 
போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 439 
நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை 
ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ளத் தடியார்முன் 
வேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப் 
பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 440 
அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ் 
சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை 
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப் 
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 441 
திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் 
அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் 
திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம் 
புகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 442 
பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப் 
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று 
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப் 
புரிந்து நிற்பதென்று கோல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 443 
நினையப்பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் 
தனையொப் பாரை யில்லாத தனியை நோக்கித் தழைத்துத் தழு த்தகண்டம் 
கனையப் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற் 
புனையப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 444 
நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் 
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச் 
செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் 
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 445 
தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட 
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும் 
ஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப் 
போதாய்ந் தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 446 
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம் 
முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட 
பார்ப்பானே எம்பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் 
பூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 447 

 

சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து 

கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன் 

தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப் 

புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 438 

 

ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்ததைப் புலனாய 

சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி 

ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப் 

போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 439 

 

நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை 

ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ளத் தடியார்முன் 

வேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப் 

பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 440 

 

அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ் 

சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை 

நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப் 

புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 441 

 

திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் 

அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் 

திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம் 

புகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 442 

 

பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப் 

பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று 

சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப் 

புரிந்து நிற்பதென்று கோல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 443 

 

நினையப்பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் 

தனையொப் பாரை யில்லாத தனியை நோக்கித் தழைத்துத் தழு த்தகண்டம் 

கனையப் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற் 

புனையப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 444 

 

நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் 

நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச் 

செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் 

புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 445 

 

தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட 

பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும் 

ஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப் 

போதாய்ந் தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 446 

 

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம் 

முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட 

பார்ப்பானே எம்பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் 

பூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 447 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.