LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-5

 

101. பலநாளும் தலைநாளும்!
பாடியவர்: அவ்வையார்,
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடா நிலை. 
ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ;
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான்; பரிசில் பெறூஉங் காலம் 5
நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது; பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! 10
102. சேம அச்சு!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
எருதே இளைய; நுகம் உண ராவே;
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவணது அறியுநர் யார்? என, உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன, 5
இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை; இருள்
யாவண தோ, நின் நிழல்வாழ் வோர்க்கே?  
103. புரத்தல் வல்லன்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண். 
துறை: விறலியாற்றுப்படை. 
ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்,
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்? எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
செல்வை யாயின், சேணோன் அல்லன்; 5
முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப்புலத் தோனே, பல் வேல் அஞ்சி;
பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப, 10
வறத்தற் காலை யாயினும்,
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!  
104. யானையும் முதலையும்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 
போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது, 5
இளையன் என்று இகழின், பெறல் அரிது, ஆடே.  
105. தேனாறும் கானாறும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். 
துறை: விறலியாற்றுப்படை. 
சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யா தாயினும், அருவி
கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட, 5
மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.  
106. தெய்வமும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே. 5
107. மாரியும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்:
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே.  
108. பறம்பும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு,
பாரியும், பரிசிலர் இரப்பின், 5
வாரேன் என்னான், அவர் வரை யன்னே.  
109. மூவேந்தர் முன் கபிலர்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி. 
துறை: மகண் மறுத்தல். 
அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; 5
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, 10
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, 15
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.  
110. யாமும் பாரியும் உளமே!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி. 
துறை: ..மகள் மறுத்தல்.
சிறப்பு: 'மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும். 
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமே; 5
குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே.  
111. விறலிக்கு எளிது!
பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி. 
துறை: மகள் மறுத்தல்.
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல். 
அளிதோ தானே, பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.  
112. உடையேம் இலமே!
பாடியவர்: பாரி மகளிர்
திணை: பொதுவியல் 
துறை: கையறு நிலை 
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! 5
113. பறம்பு கண்டு புலம்பல்!
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை.
சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம். 
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,
நட்டனை மன்னோ, முன்னே; இனியே,
பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று, 5
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் - வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!
கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்
நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.  
114. உயர்ந்தோன் மலை!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை
சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது. 
ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகு முன்றில், 5
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.  
115. அந்தோ பெரும நீயே!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை
சிறப்பு : பறம்பின் வளமை. 
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்க உக்க தேக் கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்,
அண்ணல் யானை, வேந்தர்க்கு 5
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!  
116. குதிரையும் உப்புவண்டியும்!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 
தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர்
புன் மூசு கவலைய முள் முடை வேலிப்,
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், 5
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ;
நோகோ யானே; தேய்கமா காலை!
பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும், 10
கலையுங் கொள்ளா வாகப்,பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை
பெரிய நறவின், கூர் வேற் பாரியது 15
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம் படைக் கலிமா எண்ணு வோரே.  
117. தந்தை நாடு!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 
மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக், 5
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;
பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. 10
118. சிறுகுளம் உடைந்துபோம்!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 
அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண் பறம்பு நாடே! 5
119. வேந்தரிற் சிறந்த பாரி!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை
சிறப்பு: 'நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை. 
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்,
செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!
மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப், 5
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!  
120. கம்பலை கண்ட நாடு!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்,
பூழி மயங்கப் பல உழுது, வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, 5
மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,
கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகு அரியத்
தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக் 10
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து.
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்,
பெருந் தோள் தாலம் பூசல் மேவர, 15
வருந்தா யாணர்த்து; நந்துங் கொல்லோ:
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர்
பாடி யானாப் பண்பிற் பகைவர்
ஓடுகழல் கம்பலை கண்ட 20
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!  
121. புலவரும் பொதுநோக்கமும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பொதுவியல். 
துறை: பொருண் மொழிக் காஞ்சி. 
ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;
அது நற்கு அறிந்தனை யாயின், 5
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!  
122. பெருமிதம் ஏனோ!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 
கடல் கொளப் படாஅது, உடலுநர் ஊக்கார்,
கழல்புனை திருந்துஅடிக் காரி! நின் நாடே;
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன், துப்பா கியர் என, 5
ஏத்தினர் தரூஉங் கூழே, நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;
வடமீன் புரையுங் கற்பின், மடமொழி,
அரிவை தோள் அளவு அல்லதை,
நினது என இலைநீ பெருமிதத் தையே. 10
123. மயக்கமும் இயற்கையும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 
நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல்லிசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கிழு முள்ளூர் மீமிசைப் 5
பட்ட மாரி உறையினும் பலவே.  
124. வறிது திரும்பார்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 
நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்,
பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,
வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடி யோரே. 5
125. புகழால் ஒருவன்!
பாடியவர்: வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்.
பாடப்பட்டோன்: தேர்வண் மலையன்.
திணை: வாகை. 
துறை: அரச வாகை.
குறிப்பு: சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற் 
கிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகிய
மலையனைப் பாடியது; பேரிசாத்தனார் பாட்டு எனவும் கொள்வர்.
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை,
பரூஉக் கண் மண்டை யொடு, ஊழ்மாறு பெயர 5
உண்கும், எந்தை! நிற் காண்குவந் திசினே,
நள் ளாதார் மிடல் சாய்ந்த
வல்லாள ! நின் மகிழிருக் கையே
உழுத நோன் பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆக, நீ நயந்துண்ணும் நறவே; 10
குன்றத் தன்ன களிறு பெயரக்,
கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
வெலீஇயோன் இவன் எனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு
விரைந்து வந்து, சமந் தாங்கிய, 15
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு எனத்,
தோற்றோன் தானும், நிற்கூ றும்மே,
தொலைஇயோன் அவன் என,
ஒருநீ ஆயினை; பெரும! பெரு மழைக்கு 20
இருக்கை சான்ற உயர் மலைத்
திருத்தகு சேஎய் ! நிற் பெற்றிசி னோர்க்கே.

101. பலநாளும் தலைநாளும்!
பாடியவர்: அவ்வையார்,பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை. 
ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ;அணிபூண் அணிந்த யானை இயல்தேர்அதியமான்; பரிசில் பெறூஉங் காலம் 5நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்கோட்டிடை வைத்த கவளம் போலக்கையகத் தது அது; பொய்யா காதே;அருந்தே மாந்த நெஞ்சம்!வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! 10


102. சேம அச்சு!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
எருதே இளைய; நுகம் உண ராவே;சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே;அவல் இழியினும், மிசை ஏறினும்,அவணது அறியுநர் யார்? என, உமணர்கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன, 5இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள்நாள்நிறை மதியத்து அனையை; இருள்யாவண தோ, நின் நிழல்வாழ் வோர்க்கே?  


103. புரத்தல் வல்லன்!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை. 
ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்,கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்? எனச்சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!செல்வை யாயின், சேணோன் அல்லன்; 5முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகைமலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்பகைப்புலத் தோனே, பல் வேல் அஞ்சி;பொழுது இடைப் படாஅப் புலரா மண்டைமெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப, 10வறத்தற் காலை யாயினும்,புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!  


104. யானையும் முதலையும்!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: வாகை. துறை: அரசவாகை. 
போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐநுண்பல் கருமம் நினையாது, 5இளையன் என்று இகழின், பெறல் அரிது, ஆடே.  


105. தேனாறும் கானாறும்!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: வேள் பாரி.திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை. 
சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி!தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளைவண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்பெய்யினும், பெய்யா தாயினும், அருவிகொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட, 5மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்நீரினும் இனிய சாயல்பாரி வேள்பால் பாடினை செலினே.  


106. தெய்வமும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: வேள் பாரி.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவைகடவுள் பேணேம் என்னா; ஆங்குமடவர் மெல்லியர் செல்லினும்,கடவன், பாரி கை வண்மையே. 5


107. மாரியும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: வேள் பாரி.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
பாரி பாரி என்றுபல ஏத்தி,ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்:பாரி ஒருவனும் அல்லன்;மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே.  


108. பறம்பும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: வேள் பாரி.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளிஆரம் ஆதலின், அம் புகை அயலதுசாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு,பாரியும், பரிசிலர் இரப்பின், 5வாரேன் என்னான், அவர் வரை யன்னே.  


109. மூவேந்தர் முன் கபிலர்!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: வேள் பாரி.திணை: நொச்சி. துறை: மகண் மறுத்தல். 
அளிதோ தானே, பாரியது பறம்பே!நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தேஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; 5மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.வான் கண் அற்று, அதன் மலையே; வானத்துமீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, 10மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, 15விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,ஆடினிர் பாடினிர் செலினே,நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.  


110. யாமும் பாரியும் உளமே!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: வேள் பாரி.திணை: நொச்சி. துறை: ..மகள் மறுத்தல்.சிறப்பு: 'மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும். 
கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே;முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு;முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;யாமும் பாரியும் உளமே; 5குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே.  


111. விறலிக்கு எளிது!
பாடியவர்: கபிலர்,பாடப்பட்டோன்: வேள் பாரி.திணை: நொச்சி. துறை: மகள் மறுத்தல்.சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல். 
அளிதோ தானே, பேரிருங் குன்றே!வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.  


112. உடையேம் இலமே!
பாடியவர்: பாரி மகளிர்திணை: பொதுவியல் துறை: கையறு நிலை 
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,வென்று எறி முரசின் வேந்தர் எம்குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! 5


113. பறம்பு கண்டு புலம்பல்!
பாடியவர்: கபிலர்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம். 
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,நட்டனை மன்னோ, முன்னே; இனியே,பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று, 5நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்சேறும் - வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.  


114. உயர்ந்தோன் மலை!
பாடியவர்: கபிலர்திணை: பொதுவியல் துறை: கையறுநிலைசிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது. 
ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரைசென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;களிறு மென்று இட்ட கவளம் போல,நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்வார் அசும்பு ஒழுகு முன்றில், 5தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.  


115. அந்தோ பெரும நீயே!
பாடியவர்: கபிலர்திணை: பொதுவியல் துறை: கையறுநிலைசிறப்பு : பறம்பின் வளமை. 
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,வாக்க உக்க தேக் கள் தேறல்கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்,அண்ணல் யானை, வேந்தர்க்கு 5இன்னான் ஆகிய இனியோன் குன்றே!  


116. குதிரையும் உப்புவண்டியும்!
பாடியவர்: கபிலர்திணை: பொதுவியல் துறை: கையறுநிலை 
தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர்புன் மூசு கவலைய முள் முடை வேலிப்,பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், 5பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ;நோகோ யானே; தேய்கமா காலை!பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும், 10கலையுங் கொள்ளா வாகப்,பலவும்காலம் அன்றியும் மரம் பயம் பகரும்யாணர் அறாஅ வியன்மலை அற்றேஅண்ணல் நெடுவரை ஏறித், தந்தைபெரிய நறவின், கூர் வேற் பாரியது 15அருமை அறியார் போர் எதிர்ந்து வந்தவலம் படுதானை வேந்தர்பொலம் படைக் கலிமா எண்ணு வோரே.  


117. தந்தை நாடு!
பாடியவர்: கபிலர்திணை: பொதுவியல் துறை: கையறுநிலை 
மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்ஆமா நெடு நிறை நன்புல் ஆரக், 5கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்பாசிலை முல்லை முகைக்கும்ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. 10


118. சிறுகுளம் உடைந்துபோம்!
பாடியவர்: கபிலர்திணை: பொதுவியல் துறை: கையறுநிலை 
அறையும் பொறையும் மணந்த தலைய,எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-கூர் வேல் குவைஇய மொய்ம்பின்தேர்வண் பாரி தண் பறம்பு நாடே! 5


119. வேந்தரிற் சிறந்த பாரி!
பாடியவர்: கபிலர்திணை: பொதுவியல் துறை: கையறுநிலைசிறப்பு: 'நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை. 
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்,செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ;நிழலில் நீளிடைத் தனிமரம் போலப், 5பணைகெழு வேந்தரை இறந்தும்இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!  


120. கம்பலை கண்ட நாடு!
பாடியவர்: கபிலர்திணை: பொதுவியல் துறை: கையறுநிலை 
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்,பூழி மயங்கப் பல உழுது, வித்திப்பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, 5மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,வாலிதின் விளைந்த புது வரகு அரியத்தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக் 10கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக,நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து.நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்,பெருந் தோள் தாலம் பூசல் மேவர, 15வருந்தா யாணர்த்து; நந்துங் கொல்லோ:இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தைஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர்பாடி யானாப் பண்பிற் பகைவர்ஓடுகழல் கம்பலை கண்ட 20செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!  


121. புலவரும் பொதுநோக்கமும்!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.திணை: பொதுவியல். துறை: பொருண் மொழிக் காஞ்சி. 
ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்பலரும் வருவர், பரிசில் மாக்கள்;வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;அது நற்கு அறிந்தனை யாயின், 5பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!  


122. பெருமிதம் ஏனோ!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.திணை: பாடாண். துறை: இயன் மொழி. 
கடல் கொளப் படாஅது, உடலுநர் ஊக்கார்,கழல்புனை திருந்துஅடிக் காரி! நின் நாடே;அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே;வீயாத் திருவின் விறல் கெழு தானைமூவருள் ஒருவன், துப்பா கியர் என, 5ஏத்தினர் தரூஉங் கூழே, நும்குடிவாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;வடமீன் புரையுங் கற்பின், மடமொழி,அரிவை தோள் அளவு அல்லதை,நினது என இலைநீ பெருமிதத் தையே. 10


123. மயக்கமும் இயற்கையும்!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.திணை: பாடாண். துறை: இயன் மொழி. 
நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;தொலையா நல்லிசை விளங்கு மலயன்மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்பயன்கிழு முள்ளூர் மீமிசைப் 5பட்ட மாரி உறையினும் பலவே.  


124. வறிது திரும்பார்!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.திணை: பாடாண். துறை: இயன் மொழி. 
நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்,பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப்பாடு ஆன்று, இரங்கும் அருவிப்பீடு கெழு மலையற் பாடி யோரே. 5


125. புகழால் ஒருவன்!
பாடியவர்: வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்.பாடப்பட்டோன்: தேர்வண் மலையன்.திணை: வாகை. துறை: அரச வாகை.குறிப்பு: சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற் 
கிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகியமலையனைப் பாடியது; பேரிசாத்தனார் பாட்டு எனவும் கொள்வர்.பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை,பரூஉக் கண் மண்டை யொடு, ஊழ்மாறு பெயர 5உண்கும், எந்தை! நிற் காண்குவந் திசினே,நள் ளாதார் மிடல் சாய்ந்தவல்லாள ! நின் மகிழிருக் கையேஉழுத நோன் பகடு அழிதின் றாங்குநல்லமிழ்து ஆக, நீ நயந்துண்ணும் நறவே; 10குன்றத் தன்ன களிறு பெயரக்,கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே;வெலீஇயோன் இவன் எனக்கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்புவிரைந்து வந்து, சமந் தாங்கிய, 15வல்வேல் மலையன் அல்லன் ஆயின்நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு எனத்,தோற்றோன் தானும், நிற்கூ றும்மே,தொலைஇயோன் அவன் என,ஒருநீ ஆயினை; பெரும! பெரு மழைக்கு 20இருக்கை சான்ற உயர் மலைத்திருத்தகு சேஎய் ! நிற் பெற்றிசி னோர்க்கே.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.