LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இன்ஸ்பிரேஷன் (Inspiration )

புதியதோர் உலகம் செய்வோம்

மாற்றங்கள் ஒன்றே உலகில் மாறாதவை. எந்த ஒரு படைப்பும் அதன் ஆரம்ப நிலையிலேயே இல்லாமல் அடுத்தடுத்த நிலைக்கு மாற்றியமைவதே பரிணாமம். அது தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் நிகழும். அது தனிமனிதராய் இருந்தாலும் சரி, இந்த உலகமே ஆனாலும் சரி. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.


பரிணாமம் என்பதே மாற்றங்கள் என்றால் அது தானாகவே நிகழ்ந்து விட்டுப் போகிறது. அதை ஏன் நாம் செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம். இந்த இடத்தில் மாற்றம் என்பதன் பொருள் முறைப்படுத்துதல் என்று பொருள்படுகிறது. ஒரு நதி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தைத் தானாகவே கடந்து சென்று கடலில் கலக்கும் என்பதும் இயற்கையாக நிகழும் மாற்றம். ஆனால் அந்த நதிக்கு அணையிட்டு வயலுக்குப் பாய்ச்சுதலே நாம் செய்ய வேண்டிய மாற்றம் ஆகும்.


ஒரு தனிமனிதன் குடும்பமாகி, குடும்பம் சமூகமாகி, சமூகம் ஊராக, ஊர் நாடாக, நாடே உலகமாகிறது. ஆக உலகம் என்று நாம் சொல்வது நம்மைச் சுற்றியுள்ள தனிமனிதர்களின் கூட்டத்தைத்தான். இது ஒரு சுழற்சி. உலகைப் புதியதாக்குவதற்கு முதலில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் புதுப்பிக்க வேண்டும். தன்னைப் புதுப்பித்தல் என்பது முதலில் தன்னைப் புரிதல் என்பதிலிருந்தே தொடங்குகிறது. இந்த உலகில் ஜனிக்கும் அத்தனை உயிர்களுக்கும் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் வாழ்க்கை என்பது பொதுவானது. அத்தியாவசியத் தேவைகள் என்பது ஒன்றுதான். ஆசைகள், தேவைகள் என்று எதையெல்லாம் நாம் எதிர்நோக்கி வாழ்கிறோமோ, அது அத்தனையும் மற்றவர்களுக்கும் உண்டு என்ற எண்ணம் எப்போது வருகிறதோ அப்போதுதான் அந்தப் புரிதல் நிகழும். அப்போதுதான் மனிதம் புதுப்பிக்கப்படும். உலகமும் புதுப்பிக்கப்படும்.


புதியதோர் மனிதம் செய்வோம்!



புதியதோர் உலகம் செய்வோம்!

by Rajeshkumar Jayaraman   on 03 Mar 2015  1 Comments
Tags: புதியதோர் உலகம் செய்வோம்   Puthiyathor Ulagam Seivom                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
06-Mar-2016 07:55:43 sasi said : Report Abuse
super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.