ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதி எண்ணெய் வளம் மிகுந்த கத்தார் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு முன்னிட்டு உலகின் மிகப்பெரிய தேசிய கொடி உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு கால்பந்து மைதானங்கள்(101,978 சதுர அடி மீட்டர்) அளவிற்கு இந்த பிரம்மாண்ட தேசிய கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் தேசிய தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த தேசிய கொடி தயார் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கொடியை தயார் செய்வதற்கான துணி இறக்குமதி செய்யப்பட்டு, மூன்று விமானங்களில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடந்த மே மாதம் ரோமானியா நாடு தயாரித்த 79,000 சதுர அடி மீட்டர் அளவு கொண்ட தேசிய கோடியே உலகின் மிகப் பெரிய தேசிய கொடியாக இருந்தது.
|