ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் நேற்று மாலை மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் வட பகுதிகளும், பாகிஸ்தானும், வளைகுடா நாடுகளும் குலுங்கின.நேற்று மாலை 4.14 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஈரான்-பாகிஸ்தான் எல்லை பகுதியில் சுமார் 70 பேரும், இந்தியாவின் அசாமில் ஒரு சிறுமியும் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|