|
|||||
லாரன்ஸின் புதிய முயற்சியில் உருவாகும் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா !! |
|||||
தற்போது முனி படத்தின் 3-ம் பாகமான "கங்கா"-வை இயக்கி வரும் ராகவா லாரன்ஸ் அடுத்தகாக ஒரு புதிய படத்தை இயக்க போகிறாராம். இந்த புதிய படத்திற்கு, ‘ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா’ என பெயரிட்டுல்லாராம். தமிழ் திரையுலகில் ஒரு புதிய முயற்சியாக உருவாகவிருக்கும் இந்த படம், இடைவேளை வரை ஒரு படமாகவும், இடைவேளைக்கு பிறகு இன்னொரு படமாகவும் இதை எடுக்கவிருக்கிறார்களாம். அந்த இரண்டு படங்களுக்கும் ‘கிழவன்’, ‘கருப்புதுரை‘ என்று பெயரிட்டுள்ளாராம் லாரன்ஸ். இரண்டு படங்களிலும் இவரே கதாநாயகனாக நடிக்கிறார். கருப்புதுரை படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடிக்கிறார். கிழவன் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க ஆண்ட்ரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படங்களின் பாடல்களையும், வசனத்தையும் கவிஞர் விவேகா எழுதுகிறார். இசையை லியோன் மற்றும் புதியவர் ஒருவரும் அமைக்கவிருக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாரன்ஸின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..... |
|||||
by Swathi on 03 Sep 2014 0 Comments | |||||
Tags: Oru Ticketla Rendu Cinema ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|