வரும் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, விருப்பமுள்ளவர்களுக்கு, தேர்வு நடத்த, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் ஆறு பக்கம் கொண்ட ஒரு படிவம், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, விரும்பும், தேர்வர்களுக்கு வழங்கப்படும். இதில் அவர்களின் தொகுதி குறித்த பொது அறிவு சார்ந்த கேள்விகளும், காங்கிரஸ் கட்சி குறித்த அவர்களின் மதிப்பீடு சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும் எனக் கூரப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெருபவர்களே, வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
|