மனிதன் என்பவன் ஓரே இடத்தில்நிற்கும் மரமல்ல .
உணர்ச்சிப் பிழம்பான ஓர் அசையும் பிராணி .
இயக்கிக் கொண்டே இருக்க வேண்டியது மனிதன் கடமை ,
இயங்க மறுப்பவன் மனிதன் அல்ல .
இந்திப் பயண இலக்கியத்தின் தந்தை என ராகுல் சாங்கிருத்தியாயன் ( Rahul Sankrityayan ) அழைக்கப்படுகிறார் . இவர் பல மொழி கற்ற பல்துறை வித்தகர் , மார்க்சியவாதி . அதுமட்டும் அல்லாமல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக எழுதிய காரணத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார் . இவர் 1893 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார் . ஆரம்பக் கல்வி மட்டுமே பயின்றார் . ஆனால் தாமாகவே தமிழ் , இந்தி , பாலி , சமஸ்கிருதம் , அரபி , உருது , பாரசீகம் , கன்னடம் , சிங்களம் , பிரெஞ்சு , ரஷ்யா மொழி என பல மொழிகளைக் கற்றார் . அத்துடன் புகைப்படக் கலையையும் கற்றார் . இவர் நேபாளம் , தீபெத் , இலங்கை , ஈரான் , சீனா , ரஷியா என வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் . தனது வாழ்நாளில் 45 ஆண்டு காலம் உள்நாடு , வெளிநாடுகள் பயணத்தில் செலவழித்தார் .
ராகுல்ஜி 146 புத்தகங்களை எழுதியுள்ளார் . வால்கா முதல் கங்கை வரை என்ற வரலாற்றுப் புனைவு நூல் மிகவும் பிரபலமானது . கி . மு .6000 முதல் கி . பி 1942 இல் முடியும் வரலாறாக இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது . பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . இவர் சாகித்திய அகாடமி விருதினையும் , பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார் . முறையான கல்வி கற்காதவர் என்றாலும் இவரின் அறிவுத் திறமையைக் கருதி சோவியத் யூனியன் இவரை லெனின்கிராட் பல்கலைக்கழகத்தின் இந்திய பேராசிரியர் பதவி கொடுத்தது . இவர் 1963 ஆம் ஆண்டு காலமானார் .
|