அடுத்த மாதம் 1ம் தேதி முதல், ரயில்வே சரக்கு கட்டணம், சுமார் 15 சதவீதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள்களின் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, போன்ற காரணங்களால், உணவு தானியங்கள், சிமென்ட், ரசாயன உரங்கள், இரும்பு தாது, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான சரக்கு கட்டணத்தை, ரயில்வே துறை, உயர்த்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பொதுவாக, அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை, சரக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும். இக்காலத்தில், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக, ரயில்வே துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை உயர்வில் இருந்து, சரக்கு பெட்டகங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.
|