LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயில் பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றிக் கொள்ளும் வசதி மே1-ந் தேதிக்குள் வருகிறது!

ரயில் பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றிக் கொள்ளும் வசதி மே 1-ந் தேதிக்குள் நடைமுறைக்கு வருகிறது.

ரயில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், விரைவு ரயிலில் பயணம் செய்ய, டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பு ஏறும் இடத்தை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்து உள்ளது. 

அதாவது ரயிலில் சார்ட் தயாரிப்பதற்கு முன்பே தாங்கள் ரயிலில் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தித்தர முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்த வசதி தத்கல் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டு உள்ளது. 

சில தவிர்க்க முடியாத தருணங்களில் பயணிகள் தாங்கள் புறப்பட வேண்டிய ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் போகும் போது இந்த வசதி அவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் ரயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பு 139 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்களது ரயில் எண் மற்றும் மாற்ற வேண்டிய ரயில் நிலையத்தின் தகவல்களை அளிக்க வேண்டும்.

ஒருவேளை மாற்றிய ரயில் நிலையத்தில் இல்லாமல், அவர் முன்பு பதிவு செய்த ரயில் நிலையத்தில் இருந்தும் எந்தக் கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம் என்றும், அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழங்கப்படாது என்றும் ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்து உள்ளது. 

மே 1ம் தேதிக்குள் இந்த புதிய வசதி நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்ற வகையில் ஐஆர்சிடிசி இணையதளத்தை மாற்றி அமைக்குமாறு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது பயணிகள் தான் ரயிலில் ஏறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது ரயில் நிலையத்துக்கு நேரில் சென்று மாற்ற விரும்பும் ரயில் நிலையங்களின் பெயரை எழுதிக் கொடுத்துத்தான் மாற்ற முடியும் என நடைமுறை உள்ளது குறிப்பிடத் மக்கது. இதனால் இந்த புதிய நடைமுறைக்கு ரயில் பயணிகள் இடையே வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 21 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.