LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயில்வே ஊழியர்கள் 78 நாள் சம்பளம் போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒவ்வொரு ஊழியருக்கும் 78 நாள் போனஸ் வழங்கப்பட்டது. இதே போல் இந்த ஆண்டும் போனஸ் வழங்குவது தொடர்பாக ஊழியர் சங்கங்களுடன் ரயில்வே போர்டு ஆலோசனை நடத்தியது. 

இதன் அடிப்படையில், 2017-18-ம் ஆண்டில், அடிப்படை சம்பளத்தை கணக்கில் கொண்டு 78 நாள் போனஸ் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ரயில்வே போர்டு பரிந்துரை செய்தது. இதற்கு அமைச்சரவை  ஒப்புதல் அளித்து உள்ளது.

இதன்படி 2017-18ஆம் நிதியாண்டிற்கு அரசிதழ் பதிவுபெறாத,  தகுதியுள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் 78 நாள் ஊதியத்திற்கு இணையாக உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்), ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்) ஆகியோருக்கு இந்த போனஸ் கிடையாது. இந்த போனஸ் வழங்க ரூ.2,044.31 கோடி நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. 

போனஸ் உச்சவரம்பு மாதம் ரூ.7,000ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.   தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 கிடைக்கும்.  இந்த முடிவால் அரசிதழ் பதிவுபெறாத சுமார் 11.91 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. 

இதுபற்றி ரயில்வே ஊழியர் கூட்டமைப்பினர் கூறுகையில் 80 நாள் போனஸ் வழங்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் 78 நாள் போனஸ் மட்டுமே வழங்க ஒப்புதல் தரப்பட்டு உள்ளது." என்றனர்.

by Mani Bharathi   on 13 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.