|
|||||
ரயில்வே ஊழியர்கள் 78 நாள் சம்பளம் போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! |
|||||
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒவ்வொரு ஊழியருக்கும் 78 நாள் போனஸ் வழங்கப்பட்டது. இதே போல் இந்த ஆண்டும் போனஸ் வழங்குவது தொடர்பாக ஊழியர் சங்கங்களுடன் ரயில்வே போர்டு ஆலோசனை நடத்தியது. இதன் அடிப்படையில், 2017-18-ம் ஆண்டில், அடிப்படை சம்பளத்தை கணக்கில் கொண்டு 78 நாள் போனஸ் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ரயில்வே போர்டு பரிந்துரை செய்தது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதன்படி 2017-18ஆம் நிதியாண்டிற்கு அரசிதழ் பதிவுபெறாத, தகுதியுள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் 78 நாள் ஊதியத்திற்கு இணையாக உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்), ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்) ஆகியோருக்கு இந்த போனஸ் கிடையாது. இந்த போனஸ் வழங்க ரூ.2,044.31 கோடி நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. போனஸ் உச்சவரம்பு மாதம் ரூ.7,000ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 கிடைக்கும். இந்த முடிவால் அரசிதழ் பதிவுபெறாத சுமார் 11.91 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ரயில்வே ஊழியர் கூட்டமைப்பினர் கூறுகையில் 80 நாள் போனஸ் வழங்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் 78 நாள் போனஸ் மட்டுமே வழங்க ஒப்புதல் தரப்பட்டு உள்ளது." என்றனர். |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|