LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

மழைப்போர்.. - வித்யாசாகர்

தண்ணீர்க் கேட்டுதவித்த
வாய்க்கு
வாக்கரிசியைப் போட்டது மழை..,
உயிர்ப்பிச்சை வேண்டிநின்றப்
பிள்ளைகளுக்கு
மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது மழை..,
மழைவந்தால் –
மகசூல் கூடுமென்று நம்பிய ஏழைகளை
முறுக்கிய கைக்கொண்டு
வெள்ளத்தால் அடித்து துவைத்து மழை..,
மிருகங்கள் தானே என்று தெரிந்தும்
மிருகங்களைக் கொள்ளும்
மிருகமானது மழை..,

மாடு போச்சோ
வீடு போச்சோ என்றெல்லாம் கவலையில்லை
அக்கா போனாளோ
அம்மா போனாளோ
வெள்ளம் யாரையெல்லாம் கொண்டுபோனதோயென்று
அடிவயிறு கலங்க நெருப்பிட்டு
தன் கோபக் கணக்கை –
தீர முடித்துக்கொண்டது மழை..,

முதல் நாள் மின்சாரமில்லை
அடுத்த நாள் பாலில்லை
அடுத்து வீடில்லை
அதற்கடுத்த நாள் –
நிறையப் பேரிடம் உயிரேயில்லை..

சமைக்க நெருப்போ
சுமக்க துணிவோ
எரிக்கும் பட்டினியை அணைக்க
குடிநீரோ யில்லை;

எந்திரங்கள் நின்றுபோன வீட்டிற்குள்
இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கை
மறந்துபோயிருந்தது,
மிச்சமிருந்ததும் மனிதர்களோடு சேர்ந்து
மழைக்குள் மூழ்கியது;

இப்போதும் மழை
எல்லாவற்றையும் எடுத்துபோகவில்லை
கொஞ்சத்தை உதறிவிட்டுப் போயிருக்கிறது,
எச்சரிக்கையை விடுத்திருக்கிறது;

உடனே சரிபார்த்துக்கொள்ளுங்கள் மனிதர்களே
இல்லையேல் மழை மீண்டும் வரலாம்
அந்த மழை மீண்டும் வரலாம்..

வித்யாசாகர்

by Swathi   on 16 Dec 2015  0 Comments
Tags: மழை   போர்   Rain   War   Mazhai   Por     
 தொடர்புடையவை-Related Articles
தற்சாற்புப் பொருளாதாரம்.. தற்சாற்புப் பொருளாதாரம்..
விண் மீன்கள் மழையாக! - இல.பிரகாசம் விண் மீன்கள் மழையாக! - இல.பிரகாசம்
சாதி மறு; சண்டையொழி.. வித்யாசாகர்! சாதி மறு; சண்டையொழி.. வித்யாசாகர்!
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
முள்ளங்கி பொரியல் முள்ளங்கி பொரியல்
காரப் பொரி காரப் பொரி
முருங்கைக் கீரை பொரியல் முருங்கைக் கீரை பொரியல்
மழைப்போர்.. - வித்யாசாகர் மழைப்போர்.. - வித்யாசாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.