ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி திரைப்படம், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், இந்தியில் ரீமேக் ஆக போவதாக, அந்த திரைப்படத்தின் இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.
ராஜா ராணி திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது, இந்த விழாவில், ராஜா ராணி திரைப்படத்தின் இயக்குனர் அட்லி பேசியதாவது, ராஜா ராணி திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு, இந்தியில், கிங் அண்ட் குயின் என பெயர் வைக்க முடிவாகியுள்ளது. மேலும், ஆர்யா கதாபாத்திரத்தில், ரன்பீர் கபூரும், நயன்தாரா கதாபாத்திரத்தில், தீபிக படுகோனேயும் நடிக்க இருக்கிறார்கள். தற்போது பிஸ்டல் படத்தில் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்குவார் என அட்லி தெரிவித்துள்ளார்.
|