LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ்ப்பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா! சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.!!

சென்னை அண்ணாநகர், அரினா அரங்கில் இராசராசன் பிறந்த நாள்(சதய) விழா ஆசிய தமிழ்ச்சங்கத் தலைவர் விசாகன் (இந்தோனேசியா) தலைமையில் நடை பெற்றது.  

தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலர் முனைவர் தஞ்சை  இறையரசன் வரவேற்றார்.

ஆறாம் வகுப்பு மாணவி தேவிஸ்ரீ (திரு. சுரேஷ் அவர்களின் மகள்)பாரதிதாசன் பாடலை மிக இனிமையாகப் பாடினார்.

சிறப்பு விருந்தினராக, திரு. டி.எஸ். ஸ்ரீதர் இஆப,கூடுதல் தலைமைச் செயலர்  (ஓய்வு),விழாவில் கலந்து கொண்டு  இராசராசனுக்குப் புகழாரம் சூட்டி, உரையாற்றினார்.

சரவணராஜாவின் நிலா காமிக்ஸ் வெளியீடான'பொன்னியின் செல்வன்' படக்கதை ஆங்கில இணையப் பதிப்பு (முதல் அத்தியாயம்) வெளியிட்டார். திரு. விசாகன் தமிழ்ப் பதிப்பை இணையத்தில் வெளியிட்டார். குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதுடன் தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும் குழந்தைகள் மனத்தில் பதிக்கும் திரு சரவணராஜா அவர்களுக்குப் பல தமிழ் அமைப்புகள் சார்பில் பொன்னாடை போர்த்தினர்.

தமிழகப் பதின்மப் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர்,கல்வியாளர் இளங்கோவன் தயாளன் முன்னிலையில், திரைப்பட இயக்குநர்  திருவள்ளுவர் கலைக் கூடம் வி. சேகர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பன்னாட்டுத் தமிழ்க் கல்வித்துறைப் பேராசிரியர் குறிஞ்சிவேந்தன், கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறை (ஓய்வு), சு.க.ஸ்ரீதரன், பேரரசன் இராசராசன் வரலாற்று ஆய்வு மையம், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவின் செயலர் மருத்துவர் உதய்சங்கர் ஆகியோர் சதய விழா உரையாற்றினர்.

தமிழக ஏழை மாணவர்களுக்குக்கல்வி உதவித் தொகைகள் வழங்கியும், குவைத்தில்   விபத்துக்குள்ளான தமிழகத்  தொழிலாளர்களுக்கு மருத்துவம், விமானப் பயணம், தமிழகத்தில் நிலம் வழங்கியும் சமுதாயத் தொண்டாற்றும் கவிஞர் எழுத்தாளர் வித்யா சாகர்க்குப் பலரும் பாராட்டு தெரிவித்தனர். தமிழ் சொற்பிறப்பியல் களஞ்சியம் 5 ஆம் மடலம் வெளியிட செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்க்கு உரூபா ஓர் இலட்சம் தமிழ் எழுச்சிப் பேரவையின் மூலம் வித்யாசாகர் வழங்கியிருந்தார். தமிழ் மண் பதிப்பகம் 5 ஆம் மடலம் பதிப்பை அவர்க்கு வழங்கியது.

குவைத்து கவிஞர் எழுத்தாளர் வித்யாசாகர் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் இசைத்து, சதய நாளில் பிறந்த இராசராசன், கவிஞர் யார் கண்ணன், கவிஞர் குவைத் வித்யாசாகர், பொன்னியின் செல்வன் படக்கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வரும் மாணவி நிலா ( திரு. சரவண ராசா மகள்) ஆகியோர்க்கு வாழ்த்து தெரிவிக்கப் பெற்றது.

அறிஞர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கவிஞர்கள் பில்டெக் அருண்மொழி, தஞ்சை சுமி. சுமித்திரா இருவரும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

ஆசியத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுச்சிப் பேரவை ஆகியன தமிழ்ப் பல்கலைக் கழகப் பன்னாட்டுத் தமிழ்க் கல்வி மையத்துடன் இணைந்து தமிழ் மாநாடும் இராசராசன் சதய விழாவும் பாலி தீவில் நடத்தப் பெறும் என இறையரசன் அறிவித்தார்.

அரினா இயங்குபட நிறுவனத்தின் தலைவர் சரவணராஜா நன்றியுரையாற்றினார்.

by Mani Bharathi   on 28 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.