ஆறாவது ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி தனது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 141 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக முரளி விஜய் 55 ரன்கள் விளாசினார். அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி வாட்சனின் அதிரடி ஆட்டத்தால், 17.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
|