தங்களின் விருப்பமான நடிகர்களின் படங்கள் வெளியானால், தியேட்டர்களில் நிறுத்தப்படும் அவர்களின் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது ரசிகர்கள் மன்றத்தினர் இடையே தற்போது அதிகரித்து வரும் ஒரு பழக்கமாகி விட்டது. இந்த நடைமுறை பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமல்ல.. நேற்று அறிமுகமான ஹீரோக்களுக்கும் தான்.
பெங்களூரில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் அவரது பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடுகிறார்கள். இதை எதிர்த்து பெங்களுர் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதால் பால் வீணாக்கப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
|