கடந்த 1972-ம் ஆண்டில், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடிப்பில் வெளியான ''பங்காரத மனுஷ்யா'' என்ற படம் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. படித்த இளைஞர்களை விவசாயத்திற்குள் ஈர்க்கும் வகையில் இருந்த இந்த படத்தை சித்தலிங்கய்யா இயக்கி உள்ளார்.
இந்த படம் வெளியாகி 42 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படம் மீண்டும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.
இதுகுறித்து ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான ராஜ்பகதூர் கூறியுள்ளதாவது, லிங்கா படத்திற்கு முன்பாக, நானும், ரஜினியும் பங்காரத மனுஷ்யா படத்தை பார்த்தோம். அப்போது இந்தப்படத்தை ரீ-மேக் செய்து நடிக்க வேண்டியதுதானே என்று ரஜினியிடம் சொன்னேன். அதற்கு ரஜினியிம் ஓ பண்ணலாமே, நானே நடிக்கிறேன் என்றார்.
ஆனால் அப்போது கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன லிங்கா பட கதை பிடித்துப்போக, முதலில் லிங்காவை முடித்துவிட்டு அதன்பிறகு பங்காரத மனுஷ்யா ரீ-மேக்கில் நடிக்கலாம் என்றார். நானும் சரி என்றேன் என தெரிவித்துள்ளார்.
ரஜினியின் நெருங்கிய நண்பரான ராஜ்பகதூர் கூறியிருப்பதால், ''பங்காரத மனுஷ்யா'' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மீண்டும் வெளியாகும் என்று நம்பலாம்.
|