சமீபத்தில் கோச்சடையான் படம் மே 9ல் ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டபடி படம் ரிலீசாகுமா என்ற கேள்வி உருவாகியுள்ளது.
இதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு எதிராக திரைப்பட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியது தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈராஸ் நிறுவனத்தின் சார்பில் 125 கோடி பட்ஜெட்டில் கோச்சடையான்' படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து இருக்கிறார் முரளி மனோகர். இதற்கு முன்பு ஈராஸ் சார்பாக சூர்யா நடித்த 'மாற்றான்' படத்தை வாங்கி ரிலீஸ் செய்தார். அந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 12 கோடி ரூபாய் நஷ்டமாம். இதற்கு எந்த விதத்திலும் பொறுப்பேற்காமல், பதிலும் அளிக்காமல் இருந்ததால் விநியோகஸ்தர்கள் விரக்தி அடைந்துவிட்டார்களாம்.
அந்த சமயத்தில், 'கோச்சடையான்' படத்தைத் தருவதாகச் சொல்லி 26 கோடி ரூபாயை முன்கூட்டியே வாங்கியிருக்கிறார் முரளி. இப்போது அந்த மொத்த பணமான 38 கோடியையும் செட்டில் செய்த பிறகுதான் 'கோச்சடையான்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். ஆனால் முரளி மனோகர் 20 கோடி ரூபாயைத் தருகிறேன் என்று சமாதானம் பேசிவருகிறாராம் இதனால் படம் அறிவிக்கப்பட்ட படி மே 9 ல் வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது
|