தமிழக கோவில்கள் என்றாலே திருவிழாக்கள் களைகட்டி நிற்கும். அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அடுத்தகுடி வீரசக்தி அம்மன் கோவிலில் நடைபெறும் தீ மிதிக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வேண்டியது எல்லாம் அருள்வாள் அம்மா, என்ற நம்பிக்கை இங்கு வரும் பக்தர்களும் உண்டு. மிகப் பழமை வாய்ந்த இந்த கோவிலில் வருடம் தோரும் ஆனி மாதம் முதல் வாரத்தில் காப்பு கட்டுதலுடன் துவங்கப்படும். பத்து நாட்கள் திருவிழாவில், அம்மன் வீடுகள்தோறும் வந்து அருள் பாழிக்கும் விழாவின் உச்ச கட்டமான பூக்குழி விழா 26.06.10 இன்று சனிக்கிழமை அதிகாலை 4.00மணிக்கு தீ மிதிக்கும் வைபபம் துவங்கியது. இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை பக்தி பரவசத்துடன் வீர சக்தி அம்மா சரணம் என்ற கோஷத்தோடு ஐந்தாயிரம் பேர் தீ மிதித்தனர். அழகிய சிற்றூரில் கோவில் கொண்டுள்ள வீர சக்தி அம்மனுக்கு வெளிநாடுகளில் கூட பக்தர்கள் உண்டு என்பதை இங்கு கலந்து கொண்டவர்களை வைத்து நமக்கு உணர்த்தினாள் அம்மா. இந்த விழா நிகழ்ச்சிகளில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாட்டினை அடுத்தகுடி கிராமத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
|