LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

இராமாயணக் கணக்கு

எண்ணஞ்சு கால்சிரனை எண்பதுகா ணிச்சிரசன்
 எண்ணிமனம் கொல்கவென்று கூறியதேன்? -
 ஒண்ணுதலாய் ஆன "ச' நான்கு அரிய "த' ஒன்பது
 தானெடுத்துப் போனதினால் தான்?

 சதாவதானி செய்குத்தம்பி பாவலர் இந்தப் பாடலைக் கூறி உடனிருந்தவர்களிடம் ""இது ஒரு இராமாயணக் கணக்கு; இதன் விடை என்னவென்று கூறுங்கள்'' என்று கேட்டார்.

அப்போது, உடனிருந்த அவரது மாணாக்கர்கள் விழிக்கலாயினர். பின் அவரே விடை கூறலானார்:

 எண்ணஞ்சு - நாற்பது
 எண்ணஞ்சு கால் சிரனை - பத்துதலை இராவணனை
 எண்பது காணி - ஒன்று
 எண்பது காணி சிரசன் - ஒருதலை இராமன்
 ஏன் கொல்ல எண்ணினான்?
 ஆன "ச' நாலு - "ச' வரிசையில் நான்காவது எழுத்து "சீ';
 அரிய "த' ஒன்பது - "த' வரிசையில் ஒன்பதாவது எழுத்து "தை';
 ஆன "ச' நாலு அரிய "த' ஒன்பது - சீதை.
 சீதையை எடுத்துச் சென்றதுதான் என்றார்.

 இராமாயணக் கதையை நெடுங்கணக்கில் காட்டிய விந்தையை வியந்து நின்று பாராட்டினர் உடனிருந்தோர்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.