|
|||||
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் ரண்டமூழம் !! மோகன்லால், அமிதாப் பச்சன், விக்ரம், நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்களாம் !! |
|||||
இந்திய திரையுலகிலேயே முதன் முறையாக மெகா பட்ஜெட்டில் அதாவது, 250 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்ட படத்தை மலையாளத் திரையுலகம் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரண்டமூழம் என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தை, எம்.டி.வாசுதேவன் நாயருடன் இணைந்து பல படங்களை இயக்கிய ஹரிஹரன் இயக்க உள்ளார் என்றும், பிரபல விளம்பரப் பட இயக்குனர் ஸ்ரீகுமார் இயக்க உள்ளார் என்றும் இரு விதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை அமைப்பார் எனத் தெரிகிறது. பிரபல கதாசிரியரான எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து எழுதிய ரண்டமூழம் என்ற நாவலைத்தான் அதே பெயரில் திரைப்படமாக எடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாபாரதத்தை பீமனின் பார்வையில் சொல்லியிருக்கும் நாவல்தான் ரண்டமூழம் படத்தில் பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால், பீஷ்மர் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன், அர்ஜுனன் கதாபாத்திரத்தில் விக்ரம், திரௌபதி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய், மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா என பல மொழி நடிகர்களையும் படத்தில் நடிக்க வைக்க உள்ளார்களாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த படத்தை வெளியிட உள்ளார்களாம். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த படத்தின் படபிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
|||||
by Swathi on 15 Nov 2014 0 Comments | |||||
Tags: Randaam Moozham ரண்டமூழம் Amitabh Bachchan Aishwarya Rai Mohanlal Vikram Nagarjuna | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|