82 வயது பெண்ணின் கருப்பையில் இருந்து, 40 ஆண்டு கால கல் குழந்தை(ஸ்டோன் பேபி) வெளியேற்றப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் வசித்து வரும் 82 வயது பெண்ணுக்கு, சமீபத்தில் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டது, இதனை அடுத்து, அவரது வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர், அப்போது, அவரது, கர்ப்பப்பையில், கட்டி போன்று தோன்றிய கரு கண்டறியப்பட்டது; இதனை, "ஸ்டோன் பேபி' என்று டாக்டர்கள் அழைக்கின்றனர். அந்த பெண்ணின் கருப்பையில், 40 ஆண்டு காலம் இத்தகய கரு இருந்ததையடுத்து, அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுக்க முடிவு செய்தனர்; அறுவை சிகிச்சையின் போது, இந்த கரு நழுவி கீழே விழுந்தது; கர்ப்பவதி போன்று காணப்படாத, அந்த பெண்ணின் வயிற்றில், 40 ஆண்டு காலம் கரு இருந்ததை அறிந்து டாக்டர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு, 2009ல், 92 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து, 60 ஆண்டு கருவை, அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|