LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ராவண வதத்தின்போது பல உயிர்களை காப்பாற்றி தன் உயிரை இழந்த ராவணன்!

அமிர்தசரஸில் ராவண வதம் நடைபெறுவதை தண்டவாளத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில், நாடகத்துக்காக ராவண வேடம் அணிந்திருந்த தல்பீர் சிங் தன் உயிரைக் கொடுத்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். 

தல்பீர் சிங் என்பவர் ஆண்டுதோறும் ராமலீலாவில் ராவணன் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நடிப்பவர். அதேபோல் இந்த ஆண்டும் அவர் ராவண கதாபாத்திரத்தை ஏற்று வேடம் அணிந்திருந்தார். 

அவர், அதே வேடத்துடன் பஞ்சாப், அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோரா பதக் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தசரா விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். 

இந்த கொண்டாட்டத்தில் ராவண வதம் நடைபெறுவதைக் காண திராளானோர் பங்கேற்றனர். அங்கு நிற்பதற்குக் கூட இடமில்லாததால் பொது மக்கள் சிலர் அருகே இருந்த தண்டவாளத்தில் நின்று அதைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

ராவண வதம் நடைபெறும் போது, பட்டாசு சத்தம் அதிகமாக இருந்ததால் அருகில் ஒலித்த வேறு எந்தவித சத்தமும் மக்களுக்கு கேட்கவில்லை. அந்நேரம் பொது மக்கள் நின்று கொண்டிருந்த தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்தது. 

ஆனால், இதனை ராவண வேடம் அணிந்திருந்த தல்பீர் சிங் மட்டும்  கவனித்திருக்கிறார். உடனடியாக அவர் தண்டவாளத்தை நோக்கி கையசைத்து ஓடிச்சென்று அங்கிருந்தவர்களை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டார். 

அந்த ரயில் அருகே வந்து தண்டவாளத்தில் இருந்தவர்கள் மீது மோதும் வரை அவர் இதனையே தொடர்ந்து செய்துள்ளார். அதன் விளைவாக இந்த சம்பவத்தில் உயிரிழந்த 60 பேருடன் சேர்ந்து அந்த 'ராவண' தல்பீர் சிங்கும் உயிரிழந்தார். 

அங்கு ராவண வதம் நடைபெறும் போதே ஒரு ராவணன் தன் உயிரை இழந்து பல உயிர்களை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த சம்பவத்தை தல்பீர் சிங்கின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

by Mani Bharathi   on 20 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.