அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் பிபிஎப் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றிக்கையில், கடந்த 25ம் தேதி மத்திய அரசு கொண்டுவந்த புதிய தீர்மானத்தின் படி தற்போது உள்ள பிபிஎப் வட்டி விகிதம் 8.8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 9.3 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய வட்டி குறைப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், இந்த திட்டங்களை நடைமுறைபடுத்தி வரும் வங்கிகள் வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|