|
||||||||
தம் ஆலு (dum aloo) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு-1/4 கிலோ பெரிய வெங்காயம்-3 மிளகாய்ப் பொடி-1 டீஸ்பூன் மல்லிப் பொடி-1 டீஸ்பூன் மஞ்சள் பொடி-1/4 டீஸ்பூன் பூண்டு-4 பல் இஞ்சி-1 இன்ச் சீரகம்-1 டீஸ்பூன் தக்காளி-2 கடுகு-1/4 டீஸ்பூன் எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை: 1.முதலில் உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் தோலை உரித்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2.பிறகு சீரகம், இஞ்சி, பூண்டு, தக்காளி நான்கையும் மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் மல்லி, மிளகாய், மஞ்சள் பொடிகளையும் சேர்த்து கலந்து மசாலா போல் எடுத்துக் கொள்ளவும். 3.கடாயில்எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு அது சிவக்கும் வரை வதக்கவும். 4.பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு வதக்கவும். அதன் பின் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு, உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். 5.நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|