|
||||||||||||||||||
சென்னை மீன் கறி (madras fish curry) |
||||||||||||||||||
தேவையானவை: மீன் - 1/2 கிலோ புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் வெந்தயம் - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 பச்சை மிளகாய் - 3 எண்ணெய் - 1 டீஸ்பூன் வெல்லம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கருவேப்பில்லை - 1 இணுக்கு மல்லி இலை - 2 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் புளியை கரைத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து கலக்கி வைக்கவும். 2.பிறகு கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு கருவேப்பில்லை காய்ந்த மிளகாய் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். 3.பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். 4.பிறகு கரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து, கீறிய பச்சை மிளகாய், மீன் துண்டங்கள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 5.மீன் வெந்ததும் கடைசியாக சீரக தூள் மற்றும் மிளகு தூள் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|