விருதுநகர் மாவட்டத்தில் நாட்டுக் காய்கறிகளின் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் இளைஞர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் ஆவார். டிப்ளமோ படித்த இவர் விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வருகிறார். தற்போது பருத்தி சாகுபடி செய்வதோடு, நர்சரி கார்டனும் நடத்தி வருகிறார். இவர் முன்னோர் பயன்படுத்திய பாரம்பரியக் காய்கறிகளை மீட்டுருவாக்கம் செய்வதற்காக, அவற்றின் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இதுவரை 12,256 விவசாயிகளுக்கு இலவசமாக விதைகளை வழங்கியுள்ளார். 600க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து நாட்டுக் காய்கறி விதைகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். மேலும் நாட்டுக் கொத்தமல்லி, கீரை வகைகள், கொத்தவரங்காய், நாட்டு முள்ளங்கி போன்ற காய்களையும் பயிர் செய்து வருகிறார். வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைப்பவர்களுக்கும் இலவசமாக விதைகளை வழங்குவதோடு, பயிரிடும் முறைகளையும் கற்றுக் கொடுக்கிறார்.
|