பெட்ரோல், டீசல் விலையை குறைக்க குதிரையில் வந்து மனு கொடுத்தவர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்து மக்கள் பரிஷத் அமைப்பின் நிறுவன தலைவர் லோட்டஸ் மணிகண்டன் என்பவர், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குதிரையில் வந்தார்.
அலுவலக வளாகத்திற்குள் குதிரையுடன் நுழைய முயன்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு குதிரையை அலுவலகத்தின் வெளியே நிறுத்திவிட்டு, தன் ஆதரவாளர்களுடன் சென்று கலெக்டர் ஹரிஹரனை சந்தித்து மனு அளித்தார்.
"பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக மத்தியஅரசு உற்பத்தி வரியை குறைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களும் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைத்து உள்ளனர். அதேபோல், தமிழகஅரசும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்க வேண்டும்."
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
|