LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மந்திரிகள் மற்றும் இலாக்காக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது, சீனாவின் புதிய அரசு!!

சீனாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியாளர்கள் மாற்றப்படுவார்கள். அப்போது நிர்வாகத்தில் தேவையான மாறுதல்களைச் செய்வார்கள். அதன்படி தற்போது  ஹூ ஜீண்டாவோ அதிபராக உள்ளார். இவரின் பதவிக்காலம் இப்போது முடிவடைகிறது. அடுத்த வாரம் ஜி ஜின்பிங் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

இம்முறை அரசு நிர்வாகத்தில் சீனா செய்யப்போகிற மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கை முடிவுகள் பின்வருமாறு:

சமூக மற்றும் சந்தை பிரச்னைகளில் நிர்வாகத்தின் தலையீட்டைக் குறைக்கவும், அதிகார மையத்தைக் கட்டுப்படுத்தவும் தற்போதுள்ள மந்திரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.

இப்போது உள்ள 27 இலாகாக்களும் இனி 25 ஆக குறைக்கப்படும்.

ரெயில்வேதுறையானது  நிறையப் புகார்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. அது, மின்னல்வேக புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளதால் பெரும் கடன் சுமையில் இருக்கிறது. அதனால் விரையமும், முறைகேடும் நிலவுகிறது. எனவே ரெயில்வே துறை கலைக்கப்பட்டு ரயில் சேவைகளை வழங்குதல் மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆகியவற்றின் நிர்வாகம் மற்றும் வர்த்தகப் பிரிவு என இனி தனித்தனியாகச் செயல்படும். இதற்காக, தனியார் முதலீடும் ஈர்க்கப்படும். ரயில்வே நிர்வாகத்தை  இனி போக்குவரத்து அமைச்சகம் கண்காணிக்கும்.

குடும்ப நலத்திட்ட கமிஷனும் நிறைய புகார்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. எனவே, குடும்ப நலத்திட்ட கமிஷன், சுகாதார இலாகாவுடன் இணைக்கப்படும். இத்துடன் உணவு, மருந்து கட்டுப்பாடு ஆகிய துறைகளையும் கூடுதலாக இணைத்து அதிக அதிகாரம் வழங்கப்படும்.

பத்திரிகைத்துறை மற்றும் வானொலி, சினிமா, தொலைக்காட்சித்துறை என இரண்டாக இருந்த துறைகள் இனி ஒன்றாக இணைக்கப்படுகிறது.

அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ராணுவ கொள்கையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

by MAYIL   on 11 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.