|
|||||
"சிறைச்சாலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்" சுப்ரீம் கோர்ட் உத்தரவு |
|||||
"சிறைச்சாலையில் சீர்த்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் மனிதாபிமானமற்ற நிலைமைகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டுமென தொடுக்கப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி மதன் பி. லோகுர், நீதிபதி எஸ்.அல்பல் நசீர் மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. இவ்வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: இந்தக் குழுவில் முன்னாள் நீதிபதிகள் மூவர் இடம்பெற வேண்டும். இவர்கள் தலைமையில் நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகள் கண்காணிக்கப்பட வேண்டும். அதன்பேரில் சிறைச்சாலைகளில் செய்யப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து இந்தக் குழு தெரிவிக்க வேண்டும். இதில், சிறைச்சாலைகளில் ஏற்படும் இடநெருக்கடி, கைதிகள் அதிகரிப்பு மற்றும் பெண் கைதிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அக்கறையோடு இந்தக்குழு ஆய்வுசெய்ய வேண்டும். சிறைச்சாலைகளில் அனைத்து கைதிகளுக்கும் ஏற்படும் பல்வேறு விதமான சிக்கல்களை தொடர்ந்து கவனித்து தீர்வு காணும் விதமாக உடனுக்குடன் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறுசுப்ரீம் கோர்ட் மூவர் நீதிபதிகள் அமர்வு தமது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. |
|||||
by Mani Bharathi on 28 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|