LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சபரிமலையில் மண்டல பூஜை: 5000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டம்!

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் 5 ஆயிரம் போலீசாரைபாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. 

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு  ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா தலைமை வகித்தார். கூட்டத்தில் மண்டல காலத்தின் போது இதுவரை இல்லாத அளவுக்கு 5000 போலீசாரை  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தீர்மானம் செய்யப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநில  போலீசாரையும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. 

இதற்கிடையில் மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16 ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் மண்டல பூஜைகள் தொடங்குகின்றன.  இதையொட்டி தமிழ்நாடு, கர்நாடகா,  ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக தென் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த கேரள முதல்வர்  பினராய் விஜயன் திட்டமிட்டுள்ளார். இதன்படி அக்டோபர் 31ம் தேதி திருவனந்தபுரத்தில் தென் மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ள வரும்படி தென்மாநில முதல்வர்களுக்கு  கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் அனுப்பி உள்ளார்.

சபரிமலை கோயில் விவகாரத்தில் வன்முறைகளில் ஈடுபட்டதாக கேரளாவில் 1407 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக 258 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 210  பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டிருந்தனர். 

இதில் பத்தனம்திட்டா ஆயுதப்படை முகாமில் பணிபுரியும் இப்ராகீம் குட்டி என்ற போலீஸ்காரர் படமும் வெளியானது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக விசாரணை நடத்த டிஜிபி லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். 

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் போலீசின் சைபர் செல் பிரிவில் ஏற்பட்ட தவறால் போலீஸ்காரர் புகைப்படம் வெளியானதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

by Mani Bharathi   on 26 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.