பத்திரம் பதிவு செய்வோருக்கு மேம்பட்ட சேவை வழங்கவும், பத்திரம் பதிவில் ஏற்படும் முறைகேட்டை தடுக்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களையும் நவீனப்படுத்த தமிழக அரசு ரூ. 117 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.இத்திடத்தின் மூலம் அனைத்து பதிவுத்துறை அலுவலகங்கலும் கணினி மையமாக்கப்படும்.பத்திர பதிவு சம்பந்தமான விவரங்களை அரசு இணையதளங்கள் மூலமாக பெறவும் வழிவகை செய்யப்படும்.பத்திர பதிவு மற்றும் திருமண பதிவு ஆகியவற்றில் ஏற்படும் முறைகேட்டை கண்காணிக்க அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
|