LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

காருக்கான பதிவு எண்ணை ரூ.31 லட்சத்திற்கு ஏலம் எடுத்த கேரள தொழில் அதிபர்!

கேரள தொழிலதிபர் ஒருவர் தனது ரூ.1 கோடி மதிப்புள்ள காருக்கான பதிவு எண்ணை ரூ.31 லட்சத்திற்கு ஏலம்  எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொகுசு வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு அனைவரையும் கவரும் வகையில் பேன்சி பதிவெண்கள் வாங்குவது வழக்கம். இதனால்  பேன்சி எண்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக இந்த பேன்சி எண்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஏலத்தில் விடப்பட்டு வருகிறது.  அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு குறிப்பிட்ட பதிவெண் ஒதுக்கப்படும்.

திருவனந்தபுரத்தில் ஒரு பேன்சி பதிவு எண் ரூ.31 லட்சத்திற்கு ஏலம் போனது. பாலகோபால் என்ற தொழிலதிபர் ரூ.1 கோடி மதிப்புள்ள போர்ஷே என்ற  சொகுசு காரை வாங்கினார். அதற்கு கே.எல். 01 சி.கே.1 என்ற பதிவு எண்ணுக்காக திருவனந்தபுரம்  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். 

இதே  எண்ணுக்காக மேலும் 3 பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து அந்த எண் ஏலத்தில் விடப்பட்டது. பாலகோபால் உட்பட 4 பேரும் அந்த பதிவு எண்ணுக்காக போட்டி  போட்டனர். ரூ.1 லட்சத்தில் தொடங்கிய ஏலம் பின்னர் 10, 20, 25 லட்சம் என அதிகரித்துக் கொண்டே போனது.

இறுதியில் அந்த பதிவெண்ணை பாலகோபால் ரூ.31 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். கேரளாவில் ஒரு வாகன எண் ரூ.31 லட்சத்திற்கு ஏலம் போவது இதுவே முதல்  முறை என்பது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 06 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.