LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு அளித்தது..!!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் காப்பாற்றக் கோரியும், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. 


இதன் ஒரு பகுதியாக, தமிழக ஆளுநர் திரு.ரோசய்யாவை நேரில் சந்தித்த சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை தமிழக ஆளுநரிடம் வழங்கினர்.  


ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கீழ்கண்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன:


1.  தமிழ்நாடு தகவல் ஆணையம் செயலிழந்து நிற்பதற்குக் காரணமானவரும், தகவல் உரிமைச் சட்டத்திற்கு எதிரானவரும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவருமான  தலைமை தகவல் ஆணையர் K.S.ஸ்ரீபதி அவர்கள் நீக்கப்பட்டு, புதிய ஆணையர் நியமிக்கப்படவேண்டும். ( தகவல் உரிமைச் சட்ட பிரிவு 17ன் படி, ஆளுநரால் இந்த நடவடிக்கை எடுக்க இயலும். ( கேரளாவில் 2012ல் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைமை தகவல் ஆணையர் திரு.நடராஜன் அவர்கள் கேரள ஆளுநர் H.R.பரத்வாஜால் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது)


2. இந்தியாவின் 16 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கும் “சேவை பெறும் உரிமைச் சட்டம்” தமிழகத்திலும் அமல்படுத்தப்பட தமிழக அரசிற்கு பரிந்துரைக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையைக் கொண்டுவருவதுடன் இச்சட்டம் இலஞ்சத்தை பெருமளவில் குறைக்கும்.


 3. கேரளாவைப் பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியான நடவடிக்கைகள் மூலம் பூரணமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். இது குறித்து தமிழக அரசிற்கு பரிந்துரைக்க வேண்டும்.


என சட்ட பஞ்சாயத்து இயக்கம் தங்களது மனுவில் கூறியுள்ளது. 

by Swathi   on 27 Aug 2014  0 Comments
Tags: சட்ட பஞ்சாயத்து இயக்கம்   தமிழக ஆளுனர்   Tamilnadu Governor   Satta Panchayat Iyakkam           
 தொடர்புடையவை-Related Articles
நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்… நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…
தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு அளித்தது..!! தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு அளித்தது..!!
தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள் தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !! சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !!
சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார் சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார்
தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !! தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !!
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம்  -2016 – மதுவிலக்கு ஆண்டு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு
ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது. ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.