மத்திய, மாநில அரசு பணிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த இட ஒதுக்கீட்டை அரசுத்துறை, தனியார் நிறுவனங்களில் 3 மாதத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
|