LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38

உடம்பின் 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் துன்பங்கள் – அறிமுகம்

 

இதுவரை நாம் நாளோழுக்கம் (காலை துயில் எழுவது முதல் இரவு உறங்குவது வரையிலான பழக்க வழக்கங்கள்) மற்றும் கால ஒழுக்கம் (பருவ காலங்களுக்கேற்ற உணவு மற்றும் செயல்கள்) ஆகியவற்றை பார்த்துவிட்டோம். இவற்றை பயன்படுத்தியதன் அனுபவ விளைவுகளை மின்னஞ்சல் மூலமாக நீங்கள் தெரிவிக்கலாம். அதனை பயன்படுத்துவதில் ஐயங்கள் ஏதெனுமிருப்பின் தெரிவிக்கலாம்.

 

இனி உடலின் இயற்கையான வேகங்கள் என சித்தர்களால் அழைக்கப்படும் இயற்கை உடல் இயங்கியல் நிகழ்வுகளைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம்.

 

14 வேகங்கள் என்னென்ன?


                “பதினான்கு வேகப் பேர்கள்

                         பகர்ந்திட அவற்றைக் கேளாய்

                விதித்திடும் வாதந் தும்மல்

                         மேவுநீர் மலங்கொட் டாவி

                கதித்திடு பசிநீர் வேட்கை

                         காசமோ டிளைப்பு நித்திரை

                மதித்திடு வாந்தி கண்ணீர்

                         வளர்சுக்லஞ் சுவாச மாமே” 

 

1. உடலிலிருந்து இயற்கையாக வெளியேறும் வாயு ஏப்பம், அபான வாயு (மல வாயிலிருந்து வெளியேறும் வாயு) 

2. தும்மல் 

3. சிறுநீர் 

4. மலம் 

5. கொட்டாவி 

6. பசி 

7. நீர்வேட்கை (தாகம்) 

8. இருமல் 

9. இளைப்பு (பெருமூச்சு)

10. தூக்கம்

11. வாந்தி

12. கண்ணீர்

13. விந்து

14. மூச்சு

இவை பதினான்கும் உடல் இயங்கியலில் முக்கிய நிகழ்வுகளாகும். இவற்றில் சில நாள்தோறும் நிகழும், சில எப்போதாவது நிகழும். இந்த 14 இயற்கை நிகழ்வுகளையும் அடக்குதல் கூடாது. இந்த 14 உடல் இயங்கியல் நிகழ்வுகளும் உயிர் ஆற்றலோடு (வளி, அழல், ஐயம் – விளக்கங்கள் தனியே உள்ளன) நெருங்கிய தொடர்புடையன. எனவே இவை தடுக்கப் படும் போது உயிர் ஆற்றல் ஓட்டப் பாதைகளில் தடை ஏற்பட்டு சில துன்பங்கள் விளையும். இவை தொடரும் போது பெரிய நோய்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

 

இவற்றை அடக்காமல் அந்தந்த வேகங்களுக்கு (இயக்கங்களுக்கு) ஏற்றாற்போன்ற பழக்க வழக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்வதால் உடல் நன்நிலையில் பாதுகாக்கப் படும்.


காட்டாக – ஒரு சித்தர் பாடலை நாம் பார்க்கலாம்.

          “முக்கால் மலமது பொல்லாத வாயுவு மூன்று தும்மல்

            சிக்காமலாறு சலதாரை விட்டுச் சிறு நடையும்

            மைக்காடு கொண்ட விழியாம் ! மனிதர்க்கு வாய்ப்பதெனில்

             எக்கால மும்பிணி வாராது; காயம் இருபொக்குமே”

அதாவது மலம், மலக் காற்று, மூன்று முறை சாதரணமாக உடலை விட்டு வெளியேற வேண்டும். சிறுநீர் தடையின்றி 6 முறை உடலை விட்டு வெளியேற வேண்டும். தும்மல் சிக்காமல் வர வேண்டும். இவை அனைத்தும் உடல் இயக்கத்தோடு ஒத்திசைந்து குறிப்பிட்ட இடைவெளியில் நிகழ வேண்டும். அப்படி நிகழ்ந்தால் எந்தக் காலத்திலும் நோய்கள் உடலில் தோன்றாது. உடல் இரும்பினை ஒத்து வலிமையாகும் என இப்பாடல் தெரிவிக்கிறது.

 

பொதுவாக கீழ்வாய் காற்று (மல வாய் வழியாக வெளியேறும் காற்று) வெளியேறும் போது தடுக்கவோ அல்லது சிறிது சிறிதாக வெளியேற்றவோ கூடாது. தும்மல், கொட்டாவி, இருமல், மூச்சு, பெருமூச்சு, வாந்தி, போன்றவை உருவாகும் போது அவற்றை தடுக்க முயற்சிக்கக் கூடாது.

 

சிறுநீரையும் மலத்தினையும் வெளியேற்ற வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்ட உடனேயே வெளியேற்றிவிட வேண்டும். இவற்றை நம்மால் சிறிது முயற்சி செய்தால் சிறிது நேரம் அடக்கி வைக்க முடியும், அப்படி செய்வதால் அவற்றில் உள்ள கழிவுகளும் நச்சுத் தன்மையுடைய பொருட்களும் மீண்டும் உடலால் உட்கிரகிக்கப் படும். இது பெரும் கேட்டினை விளைவிக்கும். பசியையும், தாகத்தையும் அடக்கி வைத்திருந்தால் ஏழு உடற் கட்டுகளுக்கும் உயிர் ஆற்றலுக்கும் ஓட்டம் கிடைக்காமல் துன்பம் உண்டாகும்.

 

உறக்கத்திற்கான முதல் அறிகுறி உடலில் தோன்றிய உடனேயே  உறங்கிவிடுதல் வேண்டும். அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் தொடர்ந்து விழித்திருந்து வேலை செய்யும் போது உயிர் ஆற்றலில் குறைவு ஏற்படுகிறது.

 

விழிநீர் (கண்ணீர்) அடக்குதல் என்பது இங்கே துக்கத்தினை அடக்குதலை குறிக்கும். துக்கத்தினை அடக்கி அழாமல் இருக்கும் போது அது நோயாக மாறும்.

 

உறவின் போது வெளியேறும் விந்துவை அடக்கக் கூடாது. இதனால் உடல் பாதிப்புகளும் மன பாதிப்புகளும் ஏற்படும்.

 

இவற்றில் மலம், உறக்கம், என்ற இரண்டினையும் நாம் ஏற்கனவே நாள் ஒழுக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் தனித்தனியே பார்த்துவிட்டோம். பிற இயக்கங்களைத் தடுத்தால் ஏற்படும் கேடுகளையும் முறையாக தடுக்காமல் விட்டால் ஏற்படக் கூடிய நன்மைகளையும் இனி வரும் சில வாரங்களில் பார்க்க உள்ளோம்.

 

நலப்பயணம் தொடரும்...............................................

 

 

 

 

by Swathi   on 01 Jun 2015  0 Comments
Tags: Siddha Maruthuvam   சித்த மருத்துவம்   தும்மல்   சிறுநீர்   மலம்   கொட்டாவி   பசி  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.